Thursday, February 25, 2016
On Thursday, February 25, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா
அமைச்சர் டி.பி.பூனாட்சி புகழாரம்
திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழகம் சார்பில் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 68வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். நகர கழக செயலாளர் துரை.சக்திவேல் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் அன்னகாமு முத்து சித்ராபாலு பொருளாளர் நடராஜன் மாவட்ட பிரதிநிதி ராஜசேகர் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிங்காரம்ää கிருஸ்ணமூர்த்தி கதிர்வேல் ஜெயராக்கினிää ஒன்றிய கவுன்சிலர்கள் சடையன் எம்ஆர்வி பாஸ்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரத்தினவேல் தொகுதி கழக செயலாளர் அண்ணாவி தலைமை கழக பேச்சாளர் ரா.அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அமைச்சர் டி.பி.பூனாட்சி பேசும்போது தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தேர்தல் நேரத்தில் என்னென்ன திட்டங்களை அறிவித்தார்களோ அத்தனை திட்டங்ளையும் 100 சதவீதம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் நமது அம்மா. மண்ணச்சநல்லூர் தொகுதியை பொறுத்தவரை இருங்களுரில் உப்பாற்றின் குறுக்கே தடுப்பணைதிருப்பட்டுர் சண்முகநதியின் குறுக்கே தடுப்பனைசித்தாம்பூர் அருகே தடுப்பணை உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி கிரைண்டர் மின்விசிறிகள்விலையில்லா ஆடுகள் விலையில்லா மாடுகள் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்தி;ட்டங்களை செய்துள்ளார். எனவே இப்படி தமிழக மக்களுக்காக பாடுபடும் அம்மா அவர்களுக்கு வருகின்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். மீண்டும் அம்மாவின் ஆட்சி மலர வேண்டும் இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கூட்டத்தில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு ஆவின் தலைவர் எஸ்எம்.இராஜேந்திரன் ஒன்றிய சேர்மன் பரமேஸ்வரி துணை சேர்மன் வெற்றிச்செல்வி மாவட்ட கவுன்சிலர் மூக்கன் பேரூராட்சி துணை தலைவர் பொன்னம்பலம் பாசறை ஒன்றிய செயலாளர் அய்யம்பாளையம் ரமேஸ் பேரவை ஒன்றிய செயலாளர் ஆதாளிதொகுதி கழக இணை செயலாளர் அரு.காத்தபிள்ளை நகர துணை செயலாளர்கள் கே.பாலன்மாலா ஊராட்சி செயலாளர்கள் பழையூர் பாலு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியநாராயணன் கவுன்சிலர்கள் விமலாமோகன்குமார் மோகன்ராஜ் மீனவரணி மாவட்ட துணை தலைவர் வீரக்குமார் நிர்வாகிகள் மனோபரதன் ராக்போர்ட் கிச்சான்விடி.செந்தில்குமார்என்எஸ்.பழனியப்பன் ராமசாமி கருப்பையா கண்ணன் செல்விவெங்கடேஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய அவைத்தலைவர் ராஜகோபால் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
0 comments:
Post a Comment