Thursday, February 25, 2016
On Thursday, February 25, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா
அமைச்சர் டி.பி.பூனாட்சி புகழாரம்
திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழகம் சார்பில் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 68வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். நகர கழக செயலாளர் துரை.சக்திவேல் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் அன்னகாமு முத்து சித்ராபாலு பொருளாளர் நடராஜன் மாவட்ட பிரதிநிதி ராஜசேகர் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிங்காரம்ää கிருஸ்ணமூர்த்தி கதிர்வேல் ஜெயராக்கினிää ஒன்றிய கவுன்சிலர்கள் சடையன் எம்ஆர்வி பாஸ்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரத்தினவேல் தொகுதி கழக செயலாளர் அண்ணாவி தலைமை கழக பேச்சாளர் ரா.அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அமைச்சர் டி.பி.பூனாட்சி பேசும்போது தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தேர்தல் நேரத்தில் என்னென்ன திட்டங்களை அறிவித்தார்களோ அத்தனை திட்டங்ளையும் 100 சதவீதம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் நமது அம்மா. மண்ணச்சநல்லூர் தொகுதியை பொறுத்தவரை இருங்களுரில் உப்பாற்றின் குறுக்கே தடுப்பணைதிருப்பட்டுர் சண்முகநதியின் குறுக்கே தடுப்பனைசித்தாம்பூர் அருகே தடுப்பணை உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி கிரைண்டர் மின்விசிறிகள்விலையில்லா ஆடுகள் விலையில்லா மாடுகள் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்தி;ட்டங்களை செய்துள்ளார். எனவே இப்படி தமிழக மக்களுக்காக பாடுபடும் அம்மா அவர்களுக்கு வருகின்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். மீண்டும் அம்மாவின் ஆட்சி மலர வேண்டும் இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கூட்டத்தில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு ஆவின் தலைவர் எஸ்எம்.இராஜேந்திரன் ஒன்றிய சேர்மன் பரமேஸ்வரி துணை சேர்மன் வெற்றிச்செல்வி மாவட்ட கவுன்சிலர் மூக்கன் பேரூராட்சி துணை தலைவர் பொன்னம்பலம் பாசறை ஒன்றிய செயலாளர் அய்யம்பாளையம் ரமேஸ் பேரவை ஒன்றிய செயலாளர் ஆதாளிதொகுதி கழக இணை செயலாளர் அரு.காத்தபிள்ளை நகர துணை செயலாளர்கள் கே.பாலன்மாலா ஊராட்சி செயலாளர்கள் பழையூர் பாலு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியநாராயணன் கவுன்சிலர்கள் விமலாமோகன்குமார் மோகன்ராஜ் மீனவரணி மாவட்ட துணை தலைவர் வீரக்குமார் நிர்வாகிகள் மனோபரதன் ராக்போர்ட் கிச்சான்விடி.செந்தில்குமார்என்எஸ்.பழனியப்பன் ராமசாமி கருப்பையா கண்ணன் செல்விவெங்கடேஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய அவைத்தலைவர் ராஜகோபால் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment