Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
நிலக்கோட்டை, 
மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை குறித்து கருப்பாயூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வண்டியூர் அருகே உள்ள தீர்த்தக்காடு பகுதியை சேர்ந்த முத்துராஜ் (வயது 23), வேலுபாண்டி (24), செல்லபாண்டி (23), மாந்தோப்பு விஜய் (23) ஆகிய 4 பேரும் சரண் அடைந்தனர். இவர்களை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு நாகலட்சுமிதேவி உத்தரவிட்டார்.

0 comments: