Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
தரமான உணவு வழங்கக் கோரி பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி விடுதி

பழனி-திண்டுக்கல் ரோட் டில் அமைந்துள்ள பழனி யாண்டவர் பாலிடெ க்னிக் கல்லூரி மாணவர்களில் 243 மாணவர்கள் கல்லூரி வளாகத் தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவர் களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் அடிப் படை வசதிகள் செய்து தரப் பட்டுள்ளது.

ஆனால் இந்த வசதிகள் யாவையும் முழுமையாக தங்களால் பயன்படுத்த முடி யாத நிலை உள்ளது என விடுதி மாணவர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் விடுதி யில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை, குளியலறை உள்ளிட்டவைகள் சுகாதார மற்ற நிலையில் இருப்பதாகவும் மாணவர்கள் புகார் தெரிவிக் கின்றனர்.

தரமற்ற உணவு

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக விடுதியில் வழங் கப்படும் உணவுகள் தரமற்ற தாக இருப்பதோடு உணவில் புழுக்களும் இருப்பதாக விடுதி மாணவர்கள் கல்லூரி அலு வலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் கூறப்படு கிறது. இதனால் விடுதி மாண வர்கள் அனைவரும் கல்லூரி முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர்.

முதல்வர் சமரசம்

சம்பவம் குறித்து தகவலறிந்த கல்லூரி முதல்வர்(பொறுப்பு) கந்தசாமி மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்து போராட்டத் தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விடுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் வழங்கப்படும் உணவு தர மற்றதாக உள்ளது. மேலும் விடுதி அறைகளில் வசிக்கும் மாணவர்கள் ஒவ் வொருவரிட மும் மின் கட்டணமாக ரூ. 124-ம், உணவு கட்டணமாக ரூ. 1,850-ம் வசூலிக்கின்றனர் ஆனால் அதற்கான ரசீது வழங்குவதில்லை, கடந்த சில நாட்களாக விடுதி அறையில் இருக்கும் மடிக்கணினிகள் திருடு போகும் சம்பவம் நடக் கிறது. இதற்கு கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்துபேசிய கல்லூரி முதல்வர்கந்தசாமி மாணவர்களின் அனைத்து புகார்கள் குறித்த விசாரணை யை கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும். மேலும் அனைத்து பிரச்சினை களை யும் தீர்க்க உடனடி நட வடிக்கையும் எடுக்கப்படும் என்றார். இதையடுத்துபோ ராட்டத்தில் ஈடுபட்ட மாண வர்கள் கலைந்து சென்றனர்.

0 comments: