Thursday, September 18, 2014
கவுந்தப்பாடி அருகே ஆழ்துளை கிணறு குழாய் அடைப்பை சரிசெய்தபோது தலையில் கம்பிகுத்தியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை ராசாகோவில்தோட்டத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால் தண்ணீர் வரவில்லை. எனவே ஆழ்துளை கிணற்று குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்ய கவுந்தப்பாடியை சேர்ந்த வர்க்கீஸ், கா.புதூரை சேர்ந்த தானுக்காரன், வாத்தியார், கவுந்தப்பாடி அருகே மாரப்பம்பாளையத்தை சேர்ந்த ரவி என்கிற பார்த்தீபன் (வயது 36) ஆகிய 4 பேர் சென்றிருந்தனர்.
அவர்கள் நேற்று ஆழ்துளை கிணற்று குழாய்களை வெளியே எடுத்து பழுதுநீக்கி கொண்டு இருந்தனர். அப்போது குழாய்களை வெளியே எடுக்கும்போது இயந்திரத்தின் (செயின்பிளாக்) கம்பி ஒன்று உடைந்து விழுந்தது.
போலீஸ் விசாரணை
இதில் ரவியின் தலையில் கம்பி வேகமாக குத்தியது. இதனால் கீழே விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார். மேலும் தானுக்காரன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ரவிக்கு பூங்கொடி (33) என்கிற மனைவியும், சூர்யராஜ் என்கிற மகனும், சத்தியசந்ஜிதா என்கிற மகளும் உள்ளனர்.
தொழிலாளி
கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை ராசாகோவில்தோட்டத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால் தண்ணீர் வரவில்லை. எனவே ஆழ்துளை கிணற்று குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்ய கவுந்தப்பாடியை சேர்ந்த வர்க்கீஸ், கா.புதூரை சேர்ந்த தானுக்காரன், வாத்தியார், கவுந்தப்பாடி அருகே மாரப்பம்பாளையத்தை சேர்ந்த ரவி என்கிற பார்த்தீபன் (வயது 36) ஆகிய 4 பேர் சென்றிருந்தனர்.
அவர்கள் நேற்று ஆழ்துளை கிணற்று குழாய்களை வெளியே எடுத்து பழுதுநீக்கி கொண்டு இருந்தனர். அப்போது குழாய்களை வெளியே எடுக்கும்போது இயந்திரத்தின் (செயின்பிளாக்) கம்பி ஒன்று உடைந்து விழுந்தது.
போலீஸ் விசாரணை
இதில் ரவியின் தலையில் கம்பி வேகமாக குத்தியது. இதனால் கீழே விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார். மேலும் தானுக்காரன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ரவிக்கு பூங்கொடி (33) என்கிற மனைவியும், சூர்யராஜ் என்கிற மகனும், சத்தியசந்ஜிதா என்கிற மகளும் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
0 comments:
Post a Comment