Thursday, September 18, 2014
கவுந்தப்பாடி அருகே ஆழ்துளை கிணறு குழாய் அடைப்பை சரிசெய்தபோது தலையில் கம்பிகுத்தியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை ராசாகோவில்தோட்டத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால் தண்ணீர் வரவில்லை. எனவே ஆழ்துளை கிணற்று குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்ய கவுந்தப்பாடியை சேர்ந்த வர்க்கீஸ், கா.புதூரை சேர்ந்த தானுக்காரன், வாத்தியார், கவுந்தப்பாடி அருகே மாரப்பம்பாளையத்தை சேர்ந்த ரவி என்கிற பார்த்தீபன் (வயது 36) ஆகிய 4 பேர் சென்றிருந்தனர்.
அவர்கள் நேற்று ஆழ்துளை கிணற்று குழாய்களை வெளியே எடுத்து பழுதுநீக்கி கொண்டு இருந்தனர். அப்போது குழாய்களை வெளியே எடுக்கும்போது இயந்திரத்தின் (செயின்பிளாக்) கம்பி ஒன்று உடைந்து விழுந்தது.
போலீஸ் விசாரணை
இதில் ரவியின் தலையில் கம்பி வேகமாக குத்தியது. இதனால் கீழே விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார். மேலும் தானுக்காரன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ரவிக்கு பூங்கொடி (33) என்கிற மனைவியும், சூர்யராஜ் என்கிற மகனும், சத்தியசந்ஜிதா என்கிற மகளும் உள்ளனர்.
தொழிலாளி
கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை ராசாகோவில்தோட்டத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால் தண்ணீர் வரவில்லை. எனவே ஆழ்துளை கிணற்று குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்ய கவுந்தப்பாடியை சேர்ந்த வர்க்கீஸ், கா.புதூரை சேர்ந்த தானுக்காரன், வாத்தியார், கவுந்தப்பாடி அருகே மாரப்பம்பாளையத்தை சேர்ந்த ரவி என்கிற பார்த்தீபன் (வயது 36) ஆகிய 4 பேர் சென்றிருந்தனர்.
அவர்கள் நேற்று ஆழ்துளை கிணற்று குழாய்களை வெளியே எடுத்து பழுதுநீக்கி கொண்டு இருந்தனர். அப்போது குழாய்களை வெளியே எடுக்கும்போது இயந்திரத்தின் (செயின்பிளாக்) கம்பி ஒன்று உடைந்து விழுந்தது.
போலீஸ் விசாரணை
இதில் ரவியின் தலையில் கம்பி வேகமாக குத்தியது. இதனால் கீழே விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார். மேலும் தானுக்காரன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ரவிக்கு பூங்கொடி (33) என்கிற மனைவியும், சூர்யராஜ் என்கிற மகனும், சத்தியசந்ஜிதா என்கிற மகளும் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...


0 comments:
Post a Comment