Tuesday, September 30, 2014
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் உடுமலையை அடுத்துள்ள சின்ன வீரம்பட்டி கிராமத்தில் முன்னோடி விவசாயி குமரவேல் தோட்டத்தில் நேற்று நடந்தது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் எம்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் டி.ஜெயமணி வரவேற்றார். உடுமலை தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜெ.பெரியநாயகம் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமை தென்னை வளர்ச்சி வாரிய கள அலுவலர் ஆர்.பரமசிவம் தொடங்கி வைத்தார்.
கிராமபுற இளைஞர்கள் 40 பேருக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. நவீன கருவிகள் மூலம் எளிதாக தென்னை மரம் ஏறுதல், தென்னை பராமரிப்பு பற்றிய தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. அவர்களுக்கு ஏ.மகேஷ்பிரபு, எஸ்.கணேஷ்குமார் ஆகியோர் பயிற்சியளித்தனர். இந்த பயிற்சி முகாம் வருகிற 4–ந் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment