Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
இந்தியா-சீன எல்லை பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வெளியில் இருந்து மத்தியஸ்தர்கள் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்தார். 
இந்தியாவும் சீனாவும் எல்லைப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளும் திறனை கொண்டுள்ளன. எனவே மத்தியஸ்தம் செய்வதற்கு யாரும் தேவையில்லை என்று வெளியுறவு கவுன்சில் நிகழ்ச்சி ஒன்றில் கேள்விகு ஒன்றிற்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார்.


இந்தியா- சீனா எல்லைப்பிரச்சினையில் மத்தியஸ்தம் அல்லது தீர்ப்புக்குழு ஆகீயவற்றை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா என்று பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அதற்கான தேவை எதுவும் இல்லை இரு நாடுகளும் நேரடியாக பிரச்சினைகளை பேசி தீர்த்து கொள்ளும் என்று தெரிவித்தார்". மேலும் அருகாமையில் இருக்கும் அனைத்து நாடுகளுடன் நட்புறவை வளர்க்கவே இந்தியா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments: