Thursday, September 04, 2014
ரூ.2.10 லட்சம் கோடிக்கு முதலீடு செய்ய ஜப்பான் முன்வந்துள்ளதால் இந்தியாவில் தொழில் புரட்சி ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது என்றார் மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசிய தாவது:
’’தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் தாக்குதல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு குறைந்திருக்கிறது. தமிழக மீனவர் பிரச்சினைக்கு வெகுவிரைவில் நிரந்தர தீர்வு காணப்படும். சமீபத்தில் மோடியின் ஜப்பான் பயணம் மூலம் ரூ.2.10 லட்சம் கோடி தொகைக்கு இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் முன்வந்துள்ளது. இதனால் இந்தியாவில் தொழில் புரட்சி ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்காக நடை பெறவிருக்கும் இடைத்தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழகத்துக்கு நல்ல முடிவு கிடைத்ததுபோல காவிரி பிரச்சினையிலும் நல்ல முடிவு கிடைக்கும். முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழக முதல்வரின் முயற்சிகள் பாராட்டுக்குரியது.
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து எதுவுமே செய்யாத காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவின் 100 நாள் ஆட்சியைப் பற்றி குறைகூற அருகதையில்லை.சுப்பிரமணியன் சுவாமி பாஜகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர். கட்சியில் முக்கியப் பொறுப்பில் இல்லாத ஒருவரின் கருத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை’’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment