Thursday, September 04, 2014
ரூ.2.10 லட்சம் கோடிக்கு முதலீடு செய்ய ஜப்பான் முன்வந்துள்ளதால் இந்தியாவில் தொழில் புரட்சி ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது என்றார் மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசிய தாவது:
’’தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் தாக்குதல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு குறைந்திருக்கிறது. தமிழக மீனவர் பிரச்சினைக்கு வெகுவிரைவில் நிரந்தர தீர்வு காணப்படும். சமீபத்தில் மோடியின் ஜப்பான் பயணம் மூலம் ரூ.2.10 லட்சம் கோடி தொகைக்கு இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் முன்வந்துள்ளது. இதனால் இந்தியாவில் தொழில் புரட்சி ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்காக நடை பெறவிருக்கும் இடைத்தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழகத்துக்கு நல்ல முடிவு கிடைத்ததுபோல காவிரி பிரச்சினையிலும் நல்ல முடிவு கிடைக்கும். முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழக முதல்வரின் முயற்சிகள் பாராட்டுக்குரியது.
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து எதுவுமே செய்யாத காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவின் 100 நாள் ஆட்சியைப் பற்றி குறைகூற அருகதையில்லை.சுப்பிரமணியன் சுவாமி பாஜகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர். கட்சியில் முக்கியப் பொறுப்பில் இல்லாத ஒருவரின் கருத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை’’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment