Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தே.மு.தி.க.வின் 10-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பனப்பட்டி தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுலைமான், ஒன்றிய செயலாளர்கள் கோலார்பட்டி பாலு, நித்தியானந்த சரவணன், பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கேப்டன் மன்ற செயலாளர் சையது காஜாசெரிப் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் கோல்டுகுமார், தே.மு.தி.க. நிர்வாகிகள் ஜெகன், கிட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். முடிவில் கணேசன் நன்றி கூறினார்.

0 comments: