Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
பொள்ளாச்சியில் நகை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25½ பவுன் நகை கள் மீட்கப்பட்டன.

வாகன சோதனை

பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று வரும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி துணை சூப்பிரண்டு முத்து ராஜன் மேற்பார்வையில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக் டர் சோமசுந்தரம் தலைமை யில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீ சார் உடுமலை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட் டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தி னார்கள். விசாரணையில் அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார்கள். இதனால் சந்தே கமடைந்த போலீசார் 2 பேரையும் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார் கள்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள் மதுரை ராமமூர்த்தி நகரை சேர்ந்த சக்திவேல் (வயது 29), ஜீவா நகரை சேர்ந்த மாயாண்டி (26) என்பதும் தெரியவந்தது. இதில் சக்திவேல் கடந்த பிப்ரவரி மாதம் வெங்கடேசாகாலனி வி.கே.வி. லே-அவுட்டில் ராமசாமி என்பவரது வீட்டில் 20 பவுன் நகை திருடுபோன வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது காரைக்குடி உள்பட பல்வேறு பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி. காலனியில் மளிகை கடைக்கு சென்ற ஸ்ரீதேவி என்ற பெண் ணிடம் மாயாண்டி 5 ½ பவுன் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சக்திவேல், மாயாண்டி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் களி டம் இருந்து 25½ பவுன் நகை களை மீட்டனர். பின்னர் கைதான 2 பேரையும் போலீ சார் கோர்ட் டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

0 comments: