Tuesday, September 16, 2014
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி கட்சி முகவர்கள் முன்னிலையில் நடை பெற்றது.
மின்னணு எந்திரங்கள்
கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 12 லட்சத்து 90 ஆயிரத்து 652 பேர் ஓட்டுப்போட உள்ளனர். மாநகராட்சி தேர்தலுக்காக மொத்தம் 1,226 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த பகுதிகள் என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளன.
மேயர் தேர்தலுக்கு மொத்தம் 1,380 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன.
சின்னங்கள் பொருத்தும்பணி
இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களிலும் நேற்று நடைபெற்றது. கோவை மாநகராட்சி தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான கணேஷ் தலைமையில் 5 உதவி தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
கோவை ராம்நகர் அரங்கநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு அவற்றில் 16 வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் அந்தந்த கட்சி முகவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் பொருத்தும் பணி நடைபெற்றது.
அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. முன்னதாக அனைத்து எந்திரங்களும் ஆணையாளர் கணேஷ் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டன. அப்போது உதவி தேர்தல் அதிகாரி ரவி மற்றும் உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
‘சீல்’ வைக்கப்பட்டன
இதேபோல கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தி சீல் வைக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. அந்த அறைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நாளை (புதன்கிழமை) மாலை போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும்.
பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு வழங்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நேற்றுடன் அனைவருக்கும் வாக்காளர் சீட்டு வினியோகிக்கப்பட்டு விட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்னணு எந்திரங்கள்
கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 12 லட்சத்து 90 ஆயிரத்து 652 பேர் ஓட்டுப்போட உள்ளனர். மாநகராட்சி தேர்தலுக்காக மொத்தம் 1,226 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த பகுதிகள் என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளன.
மேயர் தேர்தலுக்கு மொத்தம் 1,380 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன.
சின்னங்கள் பொருத்தும்பணி
இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களிலும் நேற்று நடைபெற்றது. கோவை மாநகராட்சி தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான கணேஷ் தலைமையில் 5 உதவி தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
கோவை ராம்நகர் அரங்கநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு அவற்றில் 16 வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் அந்தந்த கட்சி முகவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் பொருத்தும் பணி நடைபெற்றது.
அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. முன்னதாக அனைத்து எந்திரங்களும் ஆணையாளர் கணேஷ் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டன. அப்போது உதவி தேர்தல் அதிகாரி ரவி மற்றும் உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
‘சீல்’ வைக்கப்பட்டன
இதேபோல கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தி சீல் வைக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. அந்த அறைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நாளை (புதன்கிழமை) மாலை போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும்.
பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு வழங்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நேற்றுடன் அனைவருக்கும் வாக்காளர் சீட்டு வினியோகிக்கப்பட்டு விட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment