Sunday, September 21, 2014
இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் பாஜக தலைவர்கள் முரளிதர ராவ், விஜய் ஜோலி ஆகியோர் நேற்று பேச்சு நடத்தினர்.
கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் இந்த பேச்சு நடைபெற்றது. இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் களை விடுவிக்க ராஜபக்சே உத்தரவிட்டதை பாராட்டிய அவர்கள், மீனவர்களின் படகு களையும் விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண இருநாடுகளிடையே புதிய கடல்சார் கொள்கை உருவாக்கப்பட்ட வேண்டுமென்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கடலில் மீன்பிடிப்பது என்பது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை. இந்தியாவில் பதற் றத்தை அதிகரிக்கும் இந்த விவகாரத்தை இலங்கை மிகவும் நாசூக்காக கையாள வேண்டுமென்று ராஜபக்சேவிடம் முரளிதர ராவ் வலியுறுத்தினார்.
ஆசிய அரசியல் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய பொது செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ், பாஜக வெளிநாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் விஜய் ஜோலி ஆகியோர் இலங்கை சென்றுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment