Sunday, September 21, 2014
ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசுகிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி. படம்: ராய்ட்டர்ஸ்
இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈரானுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியா, இராக்கில் கணிசமான பகுதிகளை இஸ்லாமிக் ஸ்டேட் கிளர்ச்சிப் படை கைப்பற்றியுள்ளது. இரு நாடுகளின் அரசுகளால் அந்த அமைப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இராக் தலைநகர் பாக்தாதை நோக்கி கிளர்ச்சிப் படை முன்னேறிய நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஐ.எஸ்.ஸுக்கு எதிராக அண்மையில் போரில் குதித்தன.
ஈரானுடன் மறைமுக பேச்சு
மேலும் வளைகுடா பகுதியைச் சேர்ந்த சுமார் 40 நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் பரம எதிரியான ஈரானுடனும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்படு கிறது.
இதுகுறித்து ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி கொமேனி அண்மையில் நிருபர்களிடம் பேசியபோது, ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில் தங்களுடன் இணையுமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டது, அதனை நிராகரித்துவிட்டோம் என்று தெரிவித்தார்.
ஜான் கெர்ரி அழைப்பு
ஈரானுடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா தயங்கி வருகிறது. கடந்த வாரம் ஜெட்டாவில் நடைபெற்ற வளைகுடா நாடுகளின் ஆலோ சனைக் கூட்டத்தில் ஈரானுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்படவில்லை.
இந்தப் பின்னணியில் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது. இதில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி பேசியபோது, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈரான் உட்பட ஒவ்வொரு நாடுகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று தெரிவித்தார்.
இதன்மூலம் ஈரானுக்கு அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்தி ருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஈரான் ஆதரவு
சிரியா, இராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். ஈரானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அந்த வகையில் ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போருக்கு ஈரானும் மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment