Sunday, September 21, 2014
நடிகை குஷ்பு
மீண்டும் ரஜினியுடன் நடிக்க மாட்டேன் என்றும், கமலுடன் நடிக்க விரும்புகிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகினரைப் பொறுத்தவரை, ட்விட்டர் பக்கத்தில் எப்போதுமே தீவிரமாக இயங்குபவர் குஷ்பு. தன்னைப் பற்றி எந்த ஒரு செய்தி வந்தாலும், உடனுக்குடன் பதில் தருவது, கருத்துக்கள் தெரிவிப்பது என தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்.
ட்விட்டரில் தன்னைப் பின் தொடரும் ரசிகர்களின் கேள்விகளுக்கு சனிக்கிழமை பதிலளித்தார். 'ரஜினியுடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு வந்தால்?' என்ற கேள்விக்கு 'மாட்டேன்' என்றும், 'கமலுடன் 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்தால்' என்ற கேள்விக்கு 'ம்ம்ம்ம்ம்ம்ம்...' என்று பதிலளித்து இருக்கிறார்.
மேலும் அவரது சில பதில்களின் தொகுப்பு:
"தற்போதைக்கு மீண்டும் அரசியலில் நுழையும் திட்டமில்லை.
என்னுடைய பார்வையில், இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்தில் தவறான பாதையில் செல்கிறார்கள்.
கார்த்திக் நடித்ததில் மெளன ராகம் மற்றும் அக்னி நட்சத்திரம் ஆகியவை மிகவும் பிடித்த படங்கள்.
சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'மதகஜராஜா' திரைப்படம் வெளிவருவதற்கான அறிகுறிகள் இல்லை."
இவ்வாறு குஷ்பு வெவ்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment