Wednesday, September 03, 2014
உடன்குடி: குலசேகரன்பட்டினம் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் அதிர்ச்சியில் கணவரும் இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் அடுத்த கல்லாமொழியை சேர்ந்தவர் வேம்படிமுத்து (80). இவரது மனைவி முத்துக்கனி (75). இவர்களுக்கு 6 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் முத்துக்கனி திடீரென இறந்தார். இதனையடுத்து தோட்டத்திற்கு தண்ணீர் பாய்க்க சென்ற தந்தை வேம்படிமுத்துவிடம் தாயார் இறந்த செய்தியை கூறி அழைத்து வர அவரது மகன் சென்றார்.
வேம்படிமுத்துவிடம் தாய் முத்துக்கனி இறந்த செய்தியை கூறவே அதிர்ச்சியடைந்த அவர் தோட்டத்திலேயே மயக்கம் போட்டு விழுந்து அங்கேயே இறந்தார். மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment