Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by Unknown in ,    



டெல்லி: தமக்கு ஆண்மை பரிசோதனை நடத்த தடை கோரி உச்சநீதிமன்றத்தில் நித்தியானந்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நித்தியானந்தா ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறினர். நித்தியானந்தா மீது அவரது சீடர் ஆர்த்திராவ் ராம்நகர் நீதிமன்றத்தில் பாலியல் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் ராம்நகர் சிறப்பு நீதிமன்றம் நித்தியானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டிருந்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனுத் தாக்கல் செய்தார். கர்நாடக உயர்நீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நித்தியானந்தா மேல்முறையீடு செய்தார். தற்போது உச்சநீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

0 comments: