Sunday, September 21, 2014
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பாஜக வேடம் கலைந்து விட்டது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
“இலங்கை ராஜபக்சே அரசு இன ஒழிப்பு கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. ஏற்கனவே இருந்த காங்கிரஸ் அரசு இலங்கை நட்பு நாடு, எனவே அங்கு நடக்கும் உள்நாட்டு போரில் தலையிட முடியாது என்று கூறியது.
இதனையே இப்போது பதவியில் இருக்கும் பாஜக அரசும் சொல்கிறது. உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஐ.நா. சபை மூலம் இலங்கையில் நடைபெற்ற இன ஒழிப்பு பற்றி விசாரணை நடத்த முயற்சி மேற்கொண்டும் இலங்கை அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்கி வருகிறது. இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் ஆசிய அரசியல் தலைவர்கள் மாநாட்டில் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் பங்கேற்றுள்ளார்.
இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த மாநாட்டில் பாஜக அரசின் பிரஜைகள் பங்கேற்றதன் மூலம் இலங்கை விவகாரத்தில் பாஜக வின் வேடம் கலைந்து விட்டது.“ இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment