Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை, : பிரபல சிடி வியாபாரி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில் புதுப்படங்களை சிடிக்களாக தயாரித்து, சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதன் பேரில் வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். இதில், செங்குன்றம் பாடியநல்லூரை சேர்ந்த சண்முகப்பாண்டி (38) என்பவர் தொடர்ந்து புதுப்படங்களை சிடிக்களாக தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. போலீசார் அவரை சில தினங்களுக்கு முன் கைது செய்தனர்.  சண்முகப்பாண்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதை ஏற்றுக் கொண்ட கமிஷனர் ஜார்ஜ், சிடி வியாபாரி சண்முகப்பாண்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

0 comments: