Thursday, September 04, 2014
விபசாரத்தில் ஈடுபட்டதாக தெலுங்கானா போலீசிடம் சிக்கியவர் பிரபல இந்தி நடிகை ஸ்வேதா பாசு என்பது தெரிய வந்துள்ளது. இவர் தேசிய விருது பெற்ற நடிகையும் ஆவார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரபல நடிகை ஒருவர் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் விபசாரத்தில் ஈடுபட்ட அந்த நடிகையையும், அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட துணை இயக்குனர் பாலு என்பவரையும் பிடித்தனர். கைதான நடிகை பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். எனினும், போலீசாரிடம் சிக்கிய பிரபல நடிகை யார் என்பதையோ, பிடிபட்ட தொழில் அதிபரின் பெயரையோ போலீசார் வெளியிடவில்லை.
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த அந்த நடிகை விபசாரத்தில் ஈடுபடுவதற்காக ரூ.1 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகவும் அதில் நடிகைக்கு ரூ.85 ஆயிரத்தை கொடுத்துவிட்டு மீதியை துணை இயக்குனர் பாலு எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விபசாரத்தில் ஈடுபட்ட அந்த நடிகை யார் என்பது தெரியவந்துள்ளது. இது பற்றி தெலுங்கு இணையதளங்கள் அந்த நடிகையின் புகைப்படத்துடன் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளன. விபசாரத்தில் ஈடுபட்டதாக சிக்கிய நடிகையின் பெயர் ஸ்வேதா பாசு.
இவர், பிரபல இந்தி நடிகை ஆவார். மக்தே மற்றும் இக்பால் ஆகிய இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றவர்.
2002–ல் மக்தே படத்தில் அவருடைய நடிப்புக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது.
ஸ்வேதா பாசு, பெங்காலி மொழியில் ஏக் நதிர் கல்போ, தெலுங்கில் கொத்த பங்காரு லோகம், தமிழில் ராரா, சந்தமாமா ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
விபசாரத்தில், தள்ளப்பட்டது குறித்து ஸ்வேதா பாசு அளித்த விளக்கத்தையும் தெலுங்கு இணையதளங்கள் வெளியிட்டு உள்ளன.
அதில் அவர் கண்ணீர் மல்க கூறியிருப்பதாவது:–
கடந்த சில மாதங்களாகவே எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. தவிர, வாய்ப்புகளும் குறைந்து கொண்டே வந்தன. இதனால் செலவுக்கு பணமின்றி மிகுந்த நெருக்கடிக்கு ஆளானேன். இந்த நேரத்தில் பணத்தேவைக்காக சில தவறான படங்களை தேர்வு செய்தும் நடிக்க நேர்ந்தது.
மேலும், எனது குடும்பத்தை காப்பாற்ற நான் சம்பாதித்து கொடுக்கவேண்டிய நிலையும் எனக்கு இருந்தது. எனவே பணம் சம்பாதிப்பதற்கு இதை விட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் விபசாரத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். என்னால் இதில் இருந்து விடுபடவும் முடியவில்லை.
சினிமாவில் இதுபோன்ற விஷயங்கள் பொதுவான ஒன்றாகிவிட்டது.
பிரபல நடிகைகளில் பலர் விபசாரத்தில் ஈடுபடுவது பற்றியும் எனக்கு தெரியும். என்னைப் போலவே பல பெண்கள் இந்த பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை ஸ்வேதா பாசு, ஐதராபாத்தில் முதல் முறையாக பிடிபடுவதற்கு முன்பும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் விபசாரத்தில் ஈடுபடுவதை முக்கிய பிரமுகர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.
இதை அறிந்த தெலுங்கு டி.வி. சேனல் ஒன்று ரகசிய நடவடிக்கையில் இறங்கியபோதுதான் அவர் கையும், களவுமாக போலீஸ் வலையில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment