Thursday, September 04, 2014
விபசாரத்தில் ஈடுபட்டதாக தெலுங்கானா போலீசிடம் சிக்கியவர் பிரபல இந்தி நடிகை ஸ்வேதா பாசு என்பது தெரிய வந்துள்ளது. இவர் தேசிய விருது பெற்ற நடிகையும் ஆவார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரபல நடிகை ஒருவர் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் விபசாரத்தில் ஈடுபட்ட அந்த நடிகையையும், அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட துணை இயக்குனர் பாலு என்பவரையும் பிடித்தனர். கைதான நடிகை பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். எனினும், போலீசாரிடம் சிக்கிய பிரபல நடிகை யார் என்பதையோ, பிடிபட்ட தொழில் அதிபரின் பெயரையோ போலீசார் வெளியிடவில்லை.
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த அந்த நடிகை விபசாரத்தில் ஈடுபடுவதற்காக ரூ.1 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகவும் அதில் நடிகைக்கு ரூ.85 ஆயிரத்தை கொடுத்துவிட்டு மீதியை துணை இயக்குனர் பாலு எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விபசாரத்தில் ஈடுபட்ட அந்த நடிகை யார் என்பது தெரியவந்துள்ளது. இது பற்றி தெலுங்கு இணையதளங்கள் அந்த நடிகையின் புகைப்படத்துடன் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளன. விபசாரத்தில் ஈடுபட்டதாக சிக்கிய நடிகையின் பெயர் ஸ்வேதா பாசு.
இவர், பிரபல இந்தி நடிகை ஆவார். மக்தே மற்றும் இக்பால் ஆகிய இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றவர்.
2002–ல் மக்தே படத்தில் அவருடைய நடிப்புக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது.
ஸ்வேதா பாசு, பெங்காலி மொழியில் ஏக் நதிர் கல்போ, தெலுங்கில் கொத்த பங்காரு லோகம், தமிழில் ராரா, சந்தமாமா ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
விபசாரத்தில், தள்ளப்பட்டது குறித்து ஸ்வேதா பாசு அளித்த விளக்கத்தையும் தெலுங்கு இணையதளங்கள் வெளியிட்டு உள்ளன.
அதில் அவர் கண்ணீர் மல்க கூறியிருப்பதாவது:–
கடந்த சில மாதங்களாகவே எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. தவிர, வாய்ப்புகளும் குறைந்து கொண்டே வந்தன. இதனால் செலவுக்கு பணமின்றி மிகுந்த நெருக்கடிக்கு ஆளானேன். இந்த நேரத்தில் பணத்தேவைக்காக சில தவறான படங்களை தேர்வு செய்தும் நடிக்க நேர்ந்தது.
மேலும், எனது குடும்பத்தை காப்பாற்ற நான் சம்பாதித்து கொடுக்கவேண்டிய நிலையும் எனக்கு இருந்தது. எனவே பணம் சம்பாதிப்பதற்கு இதை விட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் விபசாரத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். என்னால் இதில் இருந்து விடுபடவும் முடியவில்லை.
சினிமாவில் இதுபோன்ற விஷயங்கள் பொதுவான ஒன்றாகிவிட்டது.
பிரபல நடிகைகளில் பலர் விபசாரத்தில் ஈடுபடுவது பற்றியும் எனக்கு தெரியும். என்னைப் போலவே பல பெண்கள் இந்த பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை ஸ்வேதா பாசு, ஐதராபாத்தில் முதல் முறையாக பிடிபடுவதற்கு முன்பும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் விபசாரத்தில் ஈடுபடுவதை முக்கிய பிரமுகர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.
இதை அறிந்த தெலுங்கு டி.வி. சேனல் ஒன்று ரகசிய நடவடிக்கையில் இறங்கியபோதுதான் அவர் கையும், களவுமாக போலீஸ் வலையில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...

0 comments:
Post a Comment