Monday, September 22, 2014
வெள்ளக்கோவில் நகராட்சி சார்பில், புதிய பேருந்து நிலையத்தில் அமைய உள்ள அம்மா உணவகத்தை, காங்கயம் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த அம்மா உணவகத்திற்கான கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இப்பணிகளை காங்கயம் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
இது குறித்து நகராட்சி பொறியாளர் கே.சரவணன் கூறுகையில், நவீன நீராவி அடுப்பு, அரிசி, பருப்பு மற்றும் ஒரே சமயத்தில் 240 இட்லிகளை வேகவைக்கும் சாதனம், சமையல் பாத்திரங்களைக் கழுவி கிருமி நீக்கும் இயந்திரம், குடிநீர் சுத்திகரிப்பு, குடிநீர் குளிர்விக்கும் கருவி, 12 உணவருந்தும் டேபிள்கள் உள்ளிட்ட சாதனங்கள் உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும் இந்த உணவகம் செயல்படும். தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் விரைவில் இந்த உணவகத்தை திறந்து வைக்க உள்ளார் என்றார்.
ஆய்வின் போது, நகர்மன்றத் தலைவர் வி.கந்தசாமி, நிலவள வங்கித் தலைவர் எஸ்.என்.முத்துக்குமார், கட்டட சங்கத் தலைவர் ஆர்.மணி, துணைத் தலைவர் யு.ஏ.சரவணன், கவுன்சிலர் வைகை கே.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
.jpg)
0 comments:
Post a Comment