Sunday, October 12, 2014
விசாகப்பட்டினம்: ஹுட்ஹுட் புயல் விசாகப்பட்டினத்தை தாக்கியது. இதையடுத்து அங்கு மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. வங்க கடலில் நிலை கொண்ட மிகவும் தீவிரமான ஹுட்ஹுட் புயல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிஸா மாநிலம் கோபால்பூர் இடையே இன்று மதியம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் முன்கூட்டியே விசாகப்பட்டினத்தை தாக்கியுள்ளது. துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் தற்போது மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மழைக்கு இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். பலத்த காற்றால் கூரை வீடுகள் பறந்து வருகின்றன, மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன, மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. விசாகப்பட்டினத்தில் பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் மீட்பு படையினருக்கு அதை தடையாக உள்ளது. புயலால் கடற்கரையோர பகுதிகளில் வாழும் ஆயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று ஒடிஸா மாநிலத்தில் கடற்கரையோரம் உள்ள 8 மாவட்டங்களில் வசிக்கும் 3.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புயல் விசாகப்பட்டினத்தை தாக்கி வரும் வேலையில் ஒடிஸாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இரு மாநிலங்களிலும் மீட்பு படையினர் , விமானப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் தொடர்பில் இருக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணியினருடன் பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா, ஸ்காட்லாந்துக்கு செல்லாததால் வீரர், வீராங்கனைகள் ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
0 comments:
Post a Comment