Showing posts with label விசாகப்பட்டினம். Show all posts
Showing posts with label விசாகப்பட்டினம். Show all posts
Sunday, October 12, 2014
விசாகப்பட்டினம்: ஹுட்ஹுட் புயல் விசாகப்பட்டினத்தை தாக்கியது. இதையடுத்து அங்கு மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. வங்க கடலில் நிலை கொண்ட மிகவும் தீவிரமான ஹுட்ஹுட் புயல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிஸா மாநிலம் கோபால்பூர் இடையே இன்று மதியம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் முன்கூட்டியே விசாகப்பட்டினத்தை தாக்கியுள்ளது. துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் தற்போது மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மழைக்கு இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். பலத்த காற்றால் கூரை வீடுகள் பறந்து வருகின்றன, மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன, மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. விசாகப்பட்டினத்தில் பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் மீட்பு படையினருக்கு அதை தடையாக உள்ளது. புயலால் கடற்கரையோர பகுதிகளில் வாழும் ஆயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று ஒடிஸா மாநிலத்தில் கடற்கரையோரம் உள்ள 8 மாவட்டங்களில் வசிக்கும் 3.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புயல் விசாகப்பட்டினத்தை தாக்கி வரும் வேலையில் ஒடிஸாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இரு மாநிலங்களிலும் மீட்பு படையினர் , விமானப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் தொடர்பில் இருக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
அது 1995 ஆம் ஆண்டின் பிற்பகுதி . சென்னையில் நடந்த அந்த சினிமா விருதுவிழாவில் விருது வாங்குவதற்கு மேடை ஏறிகிறார் அந்த நடிகர். அந்த நடிக...
-
உடுமலை,: உடுமலை நேதாஜி மைதானத்தில் தென்னிந்திய கபடி போட்டி இன்று துவங்கி 26ம் தேதி முடிய 3 நாட்கள் நடக்கிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி,...