Saturday, September 20, 2014
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமி அளித்த பேட்டி, எங்களது நாளிதழில் கடந்த 4-ந் தேதி வெளியானது. இதில், தமிழக அரசையும், முதல்-அமைச்சரையும் குறித்து அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி எங்கள் மீதும், சுப்பிரமணியசாமி மீதும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர, தமிழக பொதுத்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, எங்களை வருகிற அக்டோபர் 30-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளார். இந்த செய்தியை உள்நோக்கத்துடன் நாங்கள் வெளியிடவில்லை. எனவே, இந்த சம்மனை ரத்து செய்யவேண்டும். அவதூறு வழக்கு தொடர்பான அரசாணையையும் ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியம், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும், மனுதாரர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார். மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமி அளித்த பேட்டி, எங்களது நாளிதழில் கடந்த 4-ந் தேதி வெளியானது. இதில், தமிழக அரசையும், முதல்-அமைச்சரையும் குறித்து அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி எங்கள் மீதும், சுப்பிரமணியசாமி மீதும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர, தமிழக பொதுத்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, எங்களை வருகிற அக்டோபர் 30-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளார். இந்த செய்தியை உள்நோக்கத்துடன் நாங்கள் வெளியிடவில்லை. எனவே, இந்த சம்மனை ரத்து செய்யவேண்டும். அவதூறு வழக்கு தொடர்பான அரசாணையையும் ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியம், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும், மனுதாரர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார். மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment