Saturday, October 11, 2014
மாமல்லபுரம் அருகே ஏ.டி.எம். காவலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் கைது செய்யப்பட்டார். கூட்டாளிகள் 3 பேரை தேடி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கிருஷ்ணன்காரணை சத்யசாய்பாபா கோவில் அருகில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம். மைய காவலாளி முருகன் கடந்த ஜூன் மாதம் 14–ந் தேதி நள்ளிரவு கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் கருவியால் உடைக்க நடந்த முயற்சி தோல்வி அடைந்ததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றுவிட்டனர்.
இந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படையினரின் தீவிர விசாரணையில், ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் முக்கிய குற்றவாளியாக ஈடுபட்டுள்ளார் என்பதும் அவருக்கு துணையாக 3 பேர் இருந்ததும் தெரியவந்தது. அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.
செங்கல்பட்டு பொன்விளைந்தகளத்தூர் சாலையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான சதீஷ்குமார்(வயது 32) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் திருப்போரூர் மேலையூர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரன் என்பவரது மகன் ஆவார்
மேலும் சதீஷ்குமாருக்கு துணையாக வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்த அன்பழகன், திருநாவுக்கரசு, திருக்கழுக்குன்றம் தேவராஜ் ஆகிய 3 பேரும் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள இந்த 3 பேரும் விரைவில் பிடிபடுவார்கள் என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் உத்திரமேரூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுராந்தகம் சிறையில் அடைக்கப்பட்டார். சதீஷ்குமார் மீது ஏற்கனவே அவரது கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த வழக்கு மற்றும் ஓட்டேரி, திருப்போரூர், மறைமலைநகர், மேல்மருவத்தூர் போன்ற பகுதிகளில் கார், மோட்டார் சைக்கிள் திருட்டு என பல திருட்டு வழக்குகள் உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment