Friday, October 03, 2014
திருப்பூர், அக்.3-
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக ஆதரவு தெரிவித்து, அக்.4 சனிக்கிழமை திருப்பூரில் அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் தொடர்புடைய சங்கங்களின் சார்பாக ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இழப்பை ஏற்படுத்தும் என்பதால் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோரியுள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு செயலாளர் கே.காமராஜ் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சூழ்நிலையில், கடந்த நான்கைந்து நாட்களாக ஆளும்கட்சியினர் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் பொது மக்கள் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவினர் அமைதியான முறையில் உண்ணாவிரதம், கறுப்புச் சட்டை அணிதல் போன்று செயல்படுவது அவர்களது தனிப்பட்ட உரிமை. ஆனால், நீதிமன்றம் சட்டரீதியாக தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், அதை ஆட்சேபிப்பதாக இருந்தால், சட்டப்படி மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.
அத்துடன் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஜனநாயகரீதியாக கருத்து சொல்வதற்கு அனைத்து தரப்பினருக்கும் உரிமை இருக்கிறது. ஆகையால் தொழில் துறையைச் சேர்ந்தவர்களும் இந்த விசயத்தில் தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம். ஆனால் திருப்பூர் போன்ற பல லட்சம் தொழிலாளர் உழைக்கும் நகரில், இதுபோன்ற காரணங்களுக்காக உற்பத்தி நிறுத்தம் செய்வது,தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு, வருவாய் இழப்பை ஏற்படுத்தும், பொது மக்களுக்கு மேலும் பலவித பாதிப்புகளையும் ஏற்படுத்தும். அத்துடன் எதிர்காலத்தில் இது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது.
ஆகையால், பொது மக்கள் நலன் கருதி இந்த உற்பத்த நிறுத்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment