Monday, October 27, 2014
On Monday, October 27, 2014 by Unknown in Erode

ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 10 தினங்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. அதேபோன்று மாவட்டத்தின் முக்கிய நீர்ஆதாரமான பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை கொட்டி வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து கடந்த ஒரு மாதமாக தடப்பள்ளி–அரக்கன் கோட்டை மற்றும் கீழ்பவானி பாசனத்துக்கு தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் 75 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கடந்த 14–ந்தேதி 70 அடியாக சுருங்கியது.
தற்போது பெய்யும் பருவ மழையினால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 78.34 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 642 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த 14–ந்தேதிக்கு பின்னர் பெய்த மழையினால் அணையின் நீர்மட்டம் 70 அடியில் இருந்து 78.34 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுதும் கடந்த சில நாட்களாக மழை பெய்வதால் பவானி ஆற்றில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று கீழ்பவானி பாசனத்துக்கும் தண்ணீர் திறப்பு 900 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதியில் 84 மி.மீட்டர் மழை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக பெருந்துறையில் 63 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment