Monday, October 27, 2014
On Monday, October 27, 2014 by Unknown in Erode

ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 10 தினங்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. அதேபோன்று மாவட்டத்தின் முக்கிய நீர்ஆதாரமான பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை கொட்டி வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து கடந்த ஒரு மாதமாக தடப்பள்ளி–அரக்கன் கோட்டை மற்றும் கீழ்பவானி பாசனத்துக்கு தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் 75 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கடந்த 14–ந்தேதி 70 அடியாக சுருங்கியது.
தற்போது பெய்யும் பருவ மழையினால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 78.34 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 642 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த 14–ந்தேதிக்கு பின்னர் பெய்த மழையினால் அணையின் நீர்மட்டம் 70 அடியில் இருந்து 78.34 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுதும் கடந்த சில நாட்களாக மழை பெய்வதால் பவானி ஆற்றில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று கீழ்பவானி பாசனத்துக்கும் தண்ணீர் திறப்பு 900 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதியில் 84 மி.மீட்டர் மழை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக பெருந்துறையில் 63 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment