Monday, October 27, 2014
On Monday, October 27, 2014 by Unknown in Erode

தமிழ் கடவுளாம் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழாக்கள் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை புகழ்மிக்க சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவில், ஈரோடு திண்டல்மலை வேலாயுத சாமி கோவில், கோபி பச்சை மலை பாலமுருகன் கோவில், பவளமலை முத்து குமாரசாமி கோவில் மற்றும் ஈரோடு காசி பாளையம் மலேசிய பாலமுருகன் கோவில் ஆகிய கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கி நடந்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜையுடன் தொடங்கிய கந்தசஷ்டி விழாவையொட்டி தினமும் அபிசேகமும், சிறப்பு அலங்கார ஆராதனை நிகழ்ச்சியுடன் நடந்து வருகிறது.
கந்தசஷ்டி விழா தொடங்கியதையொட்டி சென்னிமலை முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பக்கத்து மாவட்டமான திருப்பூர், கோவை மாவட்டத்திலிருந்தும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வழிபட வந்த வண்ணம் உள்ளனர்.
திண்டல்மலை முருகன் கோவிலிலும் காலையிலிருந்தே பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதே போல் கோபி பச்சைமலை, பவளமலை முருகன் கோவில்களுக்கும் கந்தசஷ்டி விழா தொடங்கிய நாளிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டுச் செல்கிறார்கள்.
மேலும் மாவட்டத்தில் உள்ள மற்ற அனைத்து கோவில்களிலும் கந்தசஷ்டி விழா நடந்து வருகிறது. அனைத்து கோவில்களிலும் வரும் 29–ந் தேதி சூரசம்ஹார விழாவும், 30–ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது.
இன்னும் ஒரிரு நாட்களில் முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் பலர் காவடிகள் எடுத்து வருவார்கள், அலகுகள் குத்தியும், அந்தரத்தில் தொங்கியபடி பறக்கும் காவடியும் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment