Monday, October 27, 2014
On Monday, October 27, 2014 by Unknown in Erode

தமிழ் கடவுளாம் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழாக்கள் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை புகழ்மிக்க சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவில், ஈரோடு திண்டல்மலை வேலாயுத சாமி கோவில், கோபி பச்சை மலை பாலமுருகன் கோவில், பவளமலை முத்து குமாரசாமி கோவில் மற்றும் ஈரோடு காசி பாளையம் மலேசிய பாலமுருகன் கோவில் ஆகிய கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கி நடந்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜையுடன் தொடங்கிய கந்தசஷ்டி விழாவையொட்டி தினமும் அபிசேகமும், சிறப்பு அலங்கார ஆராதனை நிகழ்ச்சியுடன் நடந்து வருகிறது.
கந்தசஷ்டி விழா தொடங்கியதையொட்டி சென்னிமலை முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பக்கத்து மாவட்டமான திருப்பூர், கோவை மாவட்டத்திலிருந்தும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வழிபட வந்த வண்ணம் உள்ளனர்.
திண்டல்மலை முருகன் கோவிலிலும் காலையிலிருந்தே பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதே போல் கோபி பச்சைமலை, பவளமலை முருகன் கோவில்களுக்கும் கந்தசஷ்டி விழா தொடங்கிய நாளிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டுச் செல்கிறார்கள்.
மேலும் மாவட்டத்தில் உள்ள மற்ற அனைத்து கோவில்களிலும் கந்தசஷ்டி விழா நடந்து வருகிறது. அனைத்து கோவில்களிலும் வரும் 29–ந் தேதி சூரசம்ஹார விழாவும், 30–ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது.
இன்னும் ஒரிரு நாட்களில் முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் பலர் காவடிகள் எடுத்து வருவார்கள், அலகுகள் குத்தியும், அந்தரத்தில் தொங்கியபடி பறக்கும் காவடியும் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
'மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன்' - திருநாவுக்கரசர் திருச்சி: தொகுதி மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட...
-
கிராமங்களில் அழிந்து வரும் கலைகளை பாது காக்கவும், புத்துணர்வு அளிப்பதற்காகவும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே தேசிய அளவில் கலை விழா போட்டிகள் நட...
-
திருச்சியில் பிஜேபியின் சார்பாக தேர்தல் ஆலேசானை கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் தலைவர் முரலிதர ராவ் மற்றும...
0 comments:
Post a Comment