Monday, October 27, 2014
On Monday, October 27, 2014 by Unknown in Erode

தமிழ் கடவுளாம் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழாக்கள் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை புகழ்மிக்க சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவில், ஈரோடு திண்டல்மலை வேலாயுத சாமி கோவில், கோபி பச்சை மலை பாலமுருகன் கோவில், பவளமலை முத்து குமாரசாமி கோவில் மற்றும் ஈரோடு காசி பாளையம் மலேசிய பாலமுருகன் கோவில் ஆகிய கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கி நடந்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜையுடன் தொடங்கிய கந்தசஷ்டி விழாவையொட்டி தினமும் அபிசேகமும், சிறப்பு அலங்கார ஆராதனை நிகழ்ச்சியுடன் நடந்து வருகிறது.
கந்தசஷ்டி விழா தொடங்கியதையொட்டி சென்னிமலை முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பக்கத்து மாவட்டமான திருப்பூர், கோவை மாவட்டத்திலிருந்தும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வழிபட வந்த வண்ணம் உள்ளனர்.
திண்டல்மலை முருகன் கோவிலிலும் காலையிலிருந்தே பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதே போல் கோபி பச்சைமலை, பவளமலை முருகன் கோவில்களுக்கும் கந்தசஷ்டி விழா தொடங்கிய நாளிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டுச் செல்கிறார்கள்.
மேலும் மாவட்டத்தில் உள்ள மற்ற அனைத்து கோவில்களிலும் கந்தசஷ்டி விழா நடந்து வருகிறது. அனைத்து கோவில்களிலும் வரும் 29–ந் தேதி சூரசம்ஹார விழாவும், 30–ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது.
இன்னும் ஒரிரு நாட்களில் முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் பலர் காவடிகள் எடுத்து வருவார்கள், அலகுகள் குத்தியும், அந்தரத்தில் தொங்கியபடி பறக்கும் காவடியும் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment