Thursday, November 27, 2014
திருப்பூர் மாநகர அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் அவினாசி ரோட்டில் உள்ள சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு ஆட்டோ தொழிற்சங்க சம்மேளன குழு உறுப்பினர் அன்பு தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார், பொன்னுசாமி, லாரன்ஸ்(சி.ஐ.டி.யு.), சேகர்(ஏ.ஐ.டி.யு.சி.), முகமது யூனுஸ், கனகராஜ்(பொதுச்சங்கம்), மற்றும் தே.மு.தி.க., பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., ம.ம.க. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–
திருப்பூரில் வருகிற 1–ந் தேதி முதல் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தி கட்டணம் நிர்ணயம் வசூல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் திருப்பூர் மாநகரில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு கட்டுபடி ஆகாது. எனவே மீட்டர் கட்டணத்தை அதிகரித்து நிர்ணயம் வேண்டும்.
மேலும் மீட்டர் கிடைப்பதில் தாமதம், மெக்கானிக் பற்றாக்குறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மீட்டர் பொருத்துவதற்கு கால அவகாசத்தை நீட்டித்து கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 2–ந் தேதி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வேலைநிறுத்தம் செய்வது. அன்று காலை 10 மணிக்கு குமரன் சிலைமுன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment