Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by farook press in ,    
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடிகள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை தட்டிக் கேட்கவோ தடுத்து நிறுத்தவோ யாரும் முன்வரவில்லை. அவ்வப்போது சில போராட்டங்களை சில அரசியல் கட்சிகள் முன்னெடுத்தாலும் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை ஒரே நாளில் எந்த கட்சியும் முற்றுகையிடவில்லை. முதல் முறையாக 41 சுங்கச் சாவடிகளையும் முற்றுகையிட்டு அரசுக்கு பெரிய செய்தியை கொண்டு சென்றுள்ளது தமிழக வாழ்வுரிமை கட்சி. தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும் அண்ணன் பண்ருட்டி வேல் முருகன்அவர்களுக்கும் நம் பாராட்டுகள் !
இப்போது செய்துள்ள இந்த முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து பிற தமிழக கட்சிகளும் இந்த பகல் கொலை சுங்கச் சாவடிகளை இழுத்து மூட போராட்டம் நடத்த முன்வர வேண்டும். தமிழக அரசும் இதற்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என தமிழ்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் .


0 comments: