Wednesday, September 10, 2014
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில் சூலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் குட்டியப்பன், கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மகாலிங்கம்ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு வீதி, வீதியாக சென்று ஓட்டு கேட்டனர்.
கோவை மாவட்டம், சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரி துரைசாமியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில், சூலூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளரும், தொடக்க வேளாண்மை மற்றும் நில வள வங்கி தலைவருமான என்.சி.குட்டியப்பன், கருமத்தம்பட்டி பேரூராட்சித்தலைவரும், சோமனூர் நகர செயலாளருமான ஏ.சி.மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் செல்வவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, கடைவீதி, மார்க்கெட் பகுதி, இருகூர் ரெயில் நிலையம் பகுதி, சந்தைப்பேட்டை பகுதி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வீதி, வீதியாக சென்று வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் முதல்வர் ஜெயலலிதாவின் 3 ஆண்டு கால சரித்திர சாதனைகளை பட்டியலிட்டு எடுத்து கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அப்போது அவர்களை பெண்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.
அவர்களுடன் மாவட்ட கவுன்சிலர் தோப்பு அசோகன், வாகரம்பாளையம் பேரூராட்சி தலைவர் தெப்பீஸ்வரன், சூலூர் ஒன்றிய அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் அங்கமுத்து, இருகூர் துரைசாமி, இருகூர் 18வது வார்டு கவுன்சிலர் வினோத், கிளை செயலாளர் பிரகாஷ், நிர்வாகிகள் தேவராஜ், சின்னத்தம்பி, தங்கவேலு, நடராஜ்,முருகன், ஈஸ்வரன், சூலூர் வழக்கறிஞர் பிரபுராம், இருகூர் எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகிகள் தர்மலிங்கம், நாகராஜ், சுல்தான்பேட்டை ஒன்றிய நிர்வாகிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் டி.கந்தசாமி, மாவட்ட இளைஞர் அணி ப.ம.பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் ரங்கநாதன், சுல்தான்பேட்டை ஒன்றிய சேர்மன் இந்திராணி, கவுன்சிலர்கள் ஆறுமுகம், விஜயகுமார், குமார், சாவித்திரி,மேரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவி, ரங்கநாதன், கருப்புசாமி, சக்திவேல், அம்மா பேரவை தலைவர் ராமசாமி, மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள் புனிதா என்கிற பரமேஸ்வரி, லதா, சத்யா,,சுகுணா, ஜெகதீஸ்வரி, செந்தாமரை,சித்ராதேவி உள்ளிட்ட பலர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...

0 comments:
Post a Comment