Wednesday, September 10, 2014

திருப்பூர், : வருவாய் குறைந்ததால் எக்ஸ்பிரஸ் பஸ்கள் அனைத்து ஸ்டாப்களிலும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருப்பூர் மண்டல அலுவலக கட்டுப்பாட்டில் மாவட்டம் முழுவதும் 253 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில், சுமார் 1100 பஸ்கள் எல்எஸ்எஸ் என்ற பெயரில் இயக்கப்படுகின்றன. எல்எஸ்எஸ் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.4ம், அதிகபட்சமாக ரூ.13ம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த பஸ்களில் சிலவற்றை எக்ஸ்பிரஸ் என்ற பெயருடன் இயக்கப்பட்டது. அந்த பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5ம், அதிகபட்சமாக ரூ.18ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த எக்ஸ்பிரஸ் பஸ்கள் குறிப்பிட்ட ஸ்டாப்பிங்குகளில் மட்டுமே நின்று சென்றன.
இதில் தனியார் பஸ்களை ஒப்பிடுகையில், அரசு பஸ்களில் வருவாய் வெகுவாக குறைந்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தனர். குறிப்பாக மக்கள் அதிக அளவில் ஏறும் பஸ் நிறுத்தங்களில், பஸ்களை 5 நிமிடம் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச்செல்ல உத்தரவிடப்பட்டது. முக்கிய நிறுத்தங்களில் அதிகாரிகள் நின்று கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர். மேலும் வருவாய் குறைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் மத்தியில் எக்ஸ்பிரஸ் பஸ்சுக்கு போதுமான வரவேற்பு இல்லாத நிலையில், குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று சென்றதால் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை ஈடுகட்ட கடந்த சில மாதமாக ‘எக்ஸ்பிரஸ்’ பஸ்கள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
அதேபோல் பஸ் நிறுத்தங்களில், 5 நிமிடங்களுக்கு மேல் பஸ்சை நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் குறிப்பிட்ட இடங்களுக்கு விரைந்து சென்றுவிடலாம் என்று எக்ஸ்பிரஸ் பஸ்களில் ஏறும் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து, பயணிகள் கூறுகையில், சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதற்காக, ‘கட்டணம் அதிகம் கொடுத்து ‘எக்ஸ்பிரஸ்’ பஸ்களில் ஏறினால், சாதாரண பஸ் போல அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி செல்கின்றனர். மேலும் சில நிறுத்தங்களில் வெகு நேரம் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர்.
‘எக்ஸ்பிரஸ்’ என போட்டு பயணிகளிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்துக்கொண்டு ஏமாற்றி வருகின்றனர். சில நேரங்களில் ‘எக்ஸ்பிரஸ்’ பஸ்சுக்கு பின்னால் வரும் சாதாரண பஸ்கள் கூட முந்திச்சென்று விடுகின்றன. ஆகவே ‘எக்ஸ்பிரஸ்’ பஸ்களிலும் சாதாரண பஸ்களைப் போன்றே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment