Wednesday, September 10, 2014
திருப்பூர், : வருவாய் குறைந்ததால் எக்ஸ்பிரஸ் பஸ்கள் அனைத்து ஸ்டாப்களிலும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருப்பூர் மண்டல அலுவலக கட்டுப்பாட்டில் மாவட்டம் முழுவதும் 253 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில், சுமார் 1100 பஸ்கள் எல்எஸ்எஸ் என்ற பெயரில் இயக்கப்படுகின்றன. எல்எஸ்எஸ் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.4ம், அதிகபட்சமாக ரூ.13ம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த பஸ்களில் சிலவற்றை எக்ஸ்பிரஸ் என்ற பெயருடன் இயக்கப்பட்டது. அந்த பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5ம், அதிகபட்சமாக ரூ.18ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த எக்ஸ்பிரஸ் பஸ்கள் குறிப்பிட்ட ஸ்டாப்பிங்குகளில் மட்டுமே நின்று சென்றன.
இதில் தனியார் பஸ்களை ஒப்பிடுகையில், அரசு பஸ்களில் வருவாய் வெகுவாக குறைந்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தனர். குறிப்பாக மக்கள் அதிக அளவில் ஏறும் பஸ் நிறுத்தங்களில், பஸ்களை 5 நிமிடம் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச்செல்ல உத்தரவிடப்பட்டது. முக்கிய நிறுத்தங்களில் அதிகாரிகள் நின்று கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர். மேலும் வருவாய் குறைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் மத்தியில் எக்ஸ்பிரஸ் பஸ்சுக்கு போதுமான வரவேற்பு இல்லாத நிலையில், குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று சென்றதால் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை ஈடுகட்ட கடந்த சில மாதமாக ‘எக்ஸ்பிரஸ்’ பஸ்கள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
அதேபோல் பஸ் நிறுத்தங்களில், 5 நிமிடங்களுக்கு மேல் பஸ்சை நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் குறிப்பிட்ட இடங்களுக்கு விரைந்து சென்றுவிடலாம் என்று எக்ஸ்பிரஸ் பஸ்களில் ஏறும் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து, பயணிகள் கூறுகையில், சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதற்காக, ‘கட்டணம் அதிகம் கொடுத்து ‘எக்ஸ்பிரஸ்’ பஸ்களில் ஏறினால், சாதாரண பஸ் போல அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி செல்கின்றனர். மேலும் சில நிறுத்தங்களில் வெகு நேரம் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர்.
‘எக்ஸ்பிரஸ்’ என போட்டு பயணிகளிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்துக்கொண்டு ஏமாற்றி வருகின்றனர். சில நேரங்களில் ‘எக்ஸ்பிரஸ்’ பஸ்சுக்கு பின்னால் வரும் சாதாரண பஸ்கள் கூட முந்திச்சென்று விடுகின்றன. ஆகவே ‘எக்ஸ்பிரஸ்’ பஸ்களிலும் சாதாரண பஸ்களைப் போன்றே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment