Monday, September 01, 2014
திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் கோழி இறைச்சி கழிவுகளை குடியிருப்பு பகுதிகளில் கொட்டி வருவதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் இறைச்சி கடைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகள் அதிக அளவில் உள்ளன. ஆடுவதைக்கூடம் மூலமாக, ஆடுகளை தோல் உரித்து, கறியாக மாற்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு பிரச்னைகளால் ஆடுவதைக் கூடம் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் உள்ளது. தற்போது, ஆடுவதை கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், கோழி இறைச்சி கடைகளில் நிகழும் சுகாதார சீர்கேடுகளை யாரும் கவனிப்பதே இல்லை. ஆட்டு தோல் நீங்கலாக, அனைத்து பகுதிகளும் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆட்டுதோலும் பதப்படுத்தப்பட்டு வேறு பயன்பாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. கோழி இறைச்சி கடையில், குடல், இறகுடன் கூடிய தோல் ஆகியவை கழிக்கப்படுகின்றன. “டிரம்‘களில் சேகரிக்கப்பட்டு, இரவு நேரங்களில் சாக்கு மூட்டையாக கட்டி, நீர்நிலைகளிலும், ஓடைகளிலும், குப்பை மேட்டிலும் வீசப்படுகின்றன. இரு நாட்களில், அவை அழுகி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. நீர்நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டும்போது, மூன்று நாட்களில் புழுப்பிடித்து காணப்படுகின்றன. மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், ஆட்டு இறைச்சி கடைகளை கண்காணிப்பதுபோல், கோழி இறைச்சி கடைகளை கண்காணிப்பது இல்லை.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள தினசரி மார்க்கெட் பகுதியில் கோழி இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகளை சாக்கடைகளில் கொட்டுகின்றனர். சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த இறைச்சி கடைகளில் இருந்தும் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக, சுகாதார ஆய்வுக்குழு முடிவெடுக்க வேண்டும். கள ஆய்வு நடத்தி, சாக்கடை கால்வாயில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...

0 comments:
Post a Comment