Monday, September 01, 2014
திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் கோழி இறைச்சி கழிவுகளை குடியிருப்பு பகுதிகளில் கொட்டி வருவதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் இறைச்சி கடைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகள் அதிக அளவில் உள்ளன. ஆடுவதைக்கூடம் மூலமாக, ஆடுகளை தோல் உரித்து, கறியாக மாற்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு பிரச்னைகளால் ஆடுவதைக் கூடம் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் உள்ளது. தற்போது, ஆடுவதை கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், கோழி இறைச்சி கடைகளில் நிகழும் சுகாதார சீர்கேடுகளை யாரும் கவனிப்பதே இல்லை. ஆட்டு தோல் நீங்கலாக, அனைத்து பகுதிகளும் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆட்டுதோலும் பதப்படுத்தப்பட்டு வேறு பயன்பாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. கோழி இறைச்சி கடையில், குடல், இறகுடன் கூடிய தோல் ஆகியவை கழிக்கப்படுகின்றன. “டிரம்‘களில் சேகரிக்கப்பட்டு, இரவு நேரங்களில் சாக்கு மூட்டையாக கட்டி, நீர்நிலைகளிலும், ஓடைகளிலும், குப்பை மேட்டிலும் வீசப்படுகின்றன. இரு நாட்களில், அவை அழுகி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. நீர்நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டும்போது, மூன்று நாட்களில் புழுப்பிடித்து காணப்படுகின்றன. மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், ஆட்டு இறைச்சி கடைகளை கண்காணிப்பதுபோல், கோழி இறைச்சி கடைகளை கண்காணிப்பது இல்லை.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள தினசரி மார்க்கெட் பகுதியில் கோழி இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகளை சாக்கடைகளில் கொட்டுகின்றனர். சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த இறைச்சி கடைகளில் இருந்தும் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக, சுகாதார ஆய்வுக்குழு முடிவெடுக்க வேண்டும். கள ஆய்வு நடத்தி, சாக்கடை கால்வாயில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...

0 comments:
Post a Comment