Thursday, May 14, 2020

On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் திருச்சிராப்பள்ளி வனச்சரகம் கண்ணனூர் 

பிரிவுக்கு உட்பட்ட வீரமச்சான்பட்டி காப்புகாட்டில் - துறையூர் கண்ணனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் வயது-37. என்பவர் 4 கண்ணிகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் வீரமச்சான்பட்டி காப்புகாட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்து வேட்டையாட முயற்சித்தபோது அங்கு ரோந்து பணியிலிருந்த வனக்காப்பாளர் ஜான் ஜோசப் மற்றும் வனக்காவலர் கலைப்பிரியா ஆகியோர் கைது செய்து விசாரணை செய்ததில் மேற்படி மணிகண்டன் முயல் வேட்டைக்காக வந்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் வன உயிரினப்பாதுகாப்பு சட்டப்பரிவுகளின் கீழ் வன உயிரினப் குற்ற வழக்கு பதிவு செய்து. மாவட்ட வன அலுவலர்  சுஜாதா  உத்தரவுபடி ரூ.15000 இனக்கட்டணம் அபராதமாக விதித்து விடுவிக்கப்பட்டார்.
திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் திருச்சிராப்பள்ளி வனச்சரகம் கண்ணனூர் பிரிவுக்கு உட்பட்ட மாவிலிப்பட்டி காப்புகாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதியில் - ஏவ10ர் ஐய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 1.கார்த்திக். 2.சந்துரு 3. சந்தோஷ் 4.குணசேகர் 5.பாலமுருகன் 6.கலைக்செல்வன் மற்றும் 7.பிரகாஷ் ஆகியோர்கள் கடந்த மாதம் முயல் வேட்டையாடியதை வுஐமு வுழுமு யுPP-ல் பதிவேற்றம் செய்துள்ளதை அறிந்த திருச்சி வனப்பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை செய்ததில் மேற்படி மணிகண்டன் முயல் வேட்டையாடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் வன உயிரினப்பாதுகாப்பு சட்டப்பரிவுகளின் கீழ் வன உயிரினப் குற்ற வழக்கு பதிவு செய்து. மாவட்ட வன அலுவலர்  சுஜாதா  உத்தரவுபடி ரூ.20000 இனக்கட்டணம் அபராதமாக விதித்து விடுவிக்கப்பட்டாhர். 
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 7 நபர்கள் மற்றும் அவர்களை ஜாமீனில் எடுக்கவந்த ஊர் தலைவர் மற்றும் பொது மக்களுக்கு வன விலங்குகளை வேட்டையாடுதல் குற்றம் எனவும் விழிப்புணர்பு ஏற்படுத்தியும் மறைந்த வனக்காவலர் சந்துரு நினைவாக திருச்சி மாவட்ட வனக்கோட்டம் அலுவலகம் முன்பு மரக்கன்று நடவு செய்த பின்னர் அவர்கள் பிரிந்து சென்றனர்.

0 comments: