Thursday, May 14, 2020

On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 13

காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் பறிக்கப்பட்டு மத்திய நீர்வளத் துறையின் கீழ் ஒரு பிரிவாக மாற்றியதை கண்டித்தும்,  மாநில மின்வாரியங்களையும், உரிமைகளையும் பறித்து தமிகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம்

                  

விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், மற்றும் பொதுநல அமைப்புகள் மனு அளித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம் , தமிழக விவசாய சங்கம் உட்பட 13 அமைப்புக்கள்  இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 அம்மனுவில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கோரி வந்தனர். தமிழக அரசு இதனை ஏற்றுது. இந்நிலையில் இதற்கு பெரும் கேடு விளைவிக்கும் விதமாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத் துறையின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது இந்த அமைப்பை நீர்வளத்துறை ஒரு பிரிவாக மாற்றி இருப்பதே வன்மையாக கண்டித்தும், மேதும், மத்திய மின்சார சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்த மின் உற்பத்தி  வினியோகம், விலை நிர்ணயம் அனைத்தையும் தனியார் மயமாக்குவதோடு, விவசாயிகள், நெசவாளர்கள், வீட்டு உபயோக ஆகியவற்றிற்கு வழங்கப்படும் சலுகைகள் இலவச மின்சாரம் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கிறது மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், தமிழக அரசு இதனை முற்றாக நிராகரிக்க 
வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
இம்மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வடிவேல்பிரபு அரசுக்கு கோரிக்கை மனுக்கள் குறித்து அறிவுறுத்தப்படும் என தெரிவித்தார்.

0 comments: