Thursday, May 14, 2020

On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 13

திருச்சியை  சேர்ந்த 
9பேர் பேருந்து மூலம் 
மகாராஷ்ட்ராவிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமா வெளிமாநிலங்களில் இருக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு  திரும்ப முடியாமல் அவதியுற்று வந்தனர். இதே போல் தமிழர்களும் சொந்த ஊருக்கு வர முடியவில்லை. இந்நிலையில் மத்திய அரசு  அவர்களை சொந்த ஊருக்கு  அனுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலத்தில் பணிபுரியம் தமிழகத்தில் திருச்சி, நாகப்பட்டினம். தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை   
சேர்ந்த  



29தொழிலாளர்கள் பேருந்து மூலம்  தமிழ்நாடு எல்லையான ஓசூர் வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள்
பேருந்து மூலம் இன்று காலை திருச்சி வந்தனர். அவர்களில்
திருச்சி பாலக்கரை, திருவெறும்பூர், மணப்பாறை, மற்றும் துறையூர் பகுதிகளை 
சேர்ந்த 9 நபர்கள் திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் இறக்கி விடப்பட்டு பின்னர் தஞ்சை,  திருவாரூர், செல்லும்  நபர்கள் பேருந்து மூலம் சென்றனர். இந்நிலையில் திருச்சியில் இறக்கி விடப்பட்ட  
9நபர்களுக்கும் மருத்துவர்கள் 
தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர்  அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொரனா வைரஸ் நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனை செய்வதற்காக
அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள்  பரிசோதனை செய்த  பின்னர் 14 முதல் 20 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்ட பின்பு அவர்கள் வீடுகளுக்கு  அனுப்பப்படுவார்கள் அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments: