Thursday, May 14, 2020
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மே 13
திருச்சியை சேர்ந்த
9பேர் பேருந்து மூலம்
மகாராஷ்ட்ராவிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமா வெளிமாநிலங்களில் இருக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அவதியுற்று வந்தனர். இதே போல் தமிழர்களும் சொந்த ஊருக்கு வர முடியவில்லை. இந்நிலையில் மத்திய அரசு அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலத்தில் பணிபுரியம் தமிழகத்தில் திருச்சி, நாகப்பட்டினம். தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை
சேர்ந்த
29தொழிலாளர்கள் பேருந்து மூலம் தமிழ்நாடு எல்லையான ஓசூர் வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள்
பேருந்து மூலம் இன்று காலை திருச்சி வந்தனர். அவர்களில்
திருச்சி பாலக்கரை, திருவெறும்பூர், மணப்பாறை, மற்றும் துறையூர் பகுதிகளை
சேர்ந்த 9 நபர்கள் திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் இறக்கி விடப்பட்டு பின்னர் தஞ்சை, திருவாரூர், செல்லும் நபர்கள் பேருந்து மூலம் சென்றனர். இந்நிலையில் திருச்சியில் இறக்கி விடப்பட்ட
9நபர்களுக்கும் மருத்துவர்கள்
தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொரனா வைரஸ் நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனை செய்வதற்காக
அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் பரிசோதனை செய்த பின்னர் 14 முதல் 20 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்ட பின்பு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
Contribution of Rs.25 lakhs to Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PMCARES) Fund We the All ...
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...

0 comments:
Post a Comment