Thursday, May 14, 2020

On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு 


திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிபதிகள் சார்பில் ரூபாய் ஓரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒரு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் தலா 10 கிலோ அரிசி இரண்டு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ பச்சை பயிறு ஒரு கிலோ உளுத்தம் பருப்பு ஒரு கிலோ பாசிப் பருப்பு ஒரு கிலோ கோதுமை மாவு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஒரு கிலோ உப்பு ஒரு கிலோ சர்க்கரை 200 கிராம் மல்லித்தூள் 200 கிராம் மிளகாய்த்தூள் 200 கிராம் டீத்தூள் 200 கிராம் மஞ்சள் தூள் போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தலா ரூபாய் 1250 மதிப்பீட்டில் 264 துப்புரவுத் தொழிலாளர் பணியாளர்களுக்கு 

திருச்சிராப்பள்ளி முதன்மை மாவட்ட நீதிபதி முரளி சங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு ஆகிய அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று மளிகை பொருட்களை வழங்கினார்கள் மருத்துவமனை முதல்வர் மருத்துவர் அனிதா மருந்து கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் இருந்தனர்

0 comments: