Thursday, May 14, 2020

On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
முகக் கவசம் அணியவில்லை

சமூக இடைவெளி கடைபிடிடக்கப்படவில்லை


மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வேதனை


 திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தியில்
                 
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  இன்று  பெரும்பாலும் கடைகள் திறந்த நிலையில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றும் பழக்கம்  முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை  

ஓலிபெருக்கி மூலம் இது குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தினாலும் அதன் தாக்கம் எதிர்பார்த்த அளவு இல்லை
               
  எனவே, அனைத்து கடைகள் ( இறைச்சிக்கடைகள் உள்பட) மற்றும் வணிக நிலையங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதல் குறித்தான விளம்பர பதாகைகள் வைக்கப்பட வேண்டும்
              
இது ஊரடங்கு நிபந்தனைகளின்படி சமூக இடைவெளி பின்பற்றுவதற்கான ஒரு முயற்சியாகும்

 இனி வரும் காலங்களில்  வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமலும் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாமலும் வணிகம் செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

இவ்வாறு   மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன்   தெரிவித்துள்ளார்

0 comments: