Showing posts with label திருச்சி சபரிநாதன்9443086297. Show all posts
Showing posts with label திருச்சி சபரிநாதன்9443086297. Show all posts

Friday, May 29, 2020

On Friday, May 29, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 29

தமிழகத்தில் கோவில்களை திறக்க இந்து மக்கள் கட்சி- சூடம் ஏற்றி கோரிக்கை

 கொரோனா எனும் கொடூர அரக்கனை அழிக்க, தெய்வங்களால் மட்டுமே முடியும் என்பதால், கோவில்களை திறக்க வேண்டும்' 

'மனிதர்களின் கலங்கிய மனதிற்கு ஆறுதல் அளிப்பது, கோவில்கள் மட்டுமே. எனவே, அவற்றை மீண்டும் திறக்க வேண்டும். கோவில்கள் மூடப்பட்டிருப்பது, அவற்றை பராமரிக்கும் பூசாரிகளின் பொருளாதார நிலையை மோசமாக பாதித்துள்ளதால், அவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்' மேலும்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுப்பிரியர்களின் வசதிக்காக டாஸ்மாக் கடைகளை திறந்த தமிழக அரசு,  பக்தர்களின் வழிபாட்டிற்காக கோவில்களை திறக்க வேண்டும்.
கோவில்களுக்கு சென்று வருவதன் மூலம் மக்களின் மன அழுத்தம் குறையும் எனவே இந்த விவகாரத்தில் அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
என்பதை வலியுறுத்தி
மாநில இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம் ஜி தலைமையில் 
மலைக்கோட்டை அருள்மிகு மாணிக்க விநாயகர் திருக்கோவில் முன்பாக கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Wednesday, May 20, 2020

On Wednesday, May 20, 2020 by Tamilnewstv in    
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை
            

   கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள சூழ்நிலையில் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர். இந்நிலையில் டிஎன் ஆல் டிரைவர்ஸ் அசோசியேசன் சார்பில் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளைச் சேர்ந்த ஓட்டுனர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுக்கான அமல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம்  முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஓடடுனர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதியுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி வட்டாட்சியர் அலுவலகத்தி;ற்கு சென்று துணை வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்னாக போக்குவரத்;தில் பணியாற்றும் தங்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அரசு உதவவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Saturday, May 16, 2020

On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே
குளத்தில் நீரிழ் மூழ்கி 9 வயது இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு.
கிராமமே சோகத்தில் மூழ்கியது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வேம்பனூர் அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை. இவரது மனைவி கண்ணம்மாள். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். கடைசியாக உள்ள ராமுபிரியா, லெட்சுமி பிரியா என்ற 9 வயது நிரம்பிய இரண்டு மகள்களும் இரட்டைப் பிறவிகள். வெள்ளபிச்சம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வந்த இரட்டை சகோதரிகள்  இன்று அதே பகுதியில் உள்ள கும்மடிக்குளத்தில் துணி துவைத்து விட்டு குளிக்கச் சென்ற நிலையில் இரண்டு சிறுமிகளும் நீரில் மூழ்கினர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இரண்டு சிறுமிகளையும் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரட்டை சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்கள் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Friday, May 15, 2020

On Friday, May 15, 2020 by Tamilnewstv in    
முசிறி அருகே  குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி

              

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கிராமம் அமைந்துள்ளது . இந்த கிராமத்தில் சுமார் 3000 குடும்பத்தினர் பல்வேறு ஊர்களில் குறி சொல்லி ஜோதிடம் சொல்லும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

                
 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் குறி சொல்லி வாழ்க்கையை நடத்தும் காட்டு நாயக்கர் இன மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்தது .உணவுக்கு வழியில்லாமல் குழந்தைகளுடன் இம்மக்கள் வாடினர்.
இது குறித்து அறிந்த தமிழக  முன்னாள் முதன்மை செயலாளர் ராம் மோகன் ராவ் அவர்களால் நடத்தப்படும் ஆர் எம் ஆர் பாசறை மூலமாக குடுகுடுப்பை அடித்து குறி சொல்லும் இந்த மக்களுக்கு 5 கிலோ அரிசி நிவாரண பொருளாக வழங்கினார் .நிவாரண பொருட்களை பாசறை நிர்வாகிகள் அரங்கூர் கிராமத்திற்கு வந்து நேரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் வழங்கினர். வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டு வந்த தங்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கியதற்கு குறிசொல்லும் மக்கள் நன்றி தெரிவித்து வாழ்த்தினர் .

Thursday, May 14, 2020

On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
முகக் கவசம் அணியவில்லை

சமூக இடைவெளி கடைபிடிடக்கப்படவில்லை


மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வேதனை


 திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தியில்
                 
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  இன்று  பெரும்பாலும் கடைகள் திறந்த நிலையில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றும் பழக்கம்  முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை  

ஓலிபெருக்கி மூலம் இது குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தினாலும் அதன் தாக்கம் எதிர்பார்த்த அளவு இல்லை
               
  எனவே, அனைத்து கடைகள் ( இறைச்சிக்கடைகள் உள்பட) மற்றும் வணிக நிலையங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதல் குறித்தான விளம்பர பதாகைகள் வைக்கப்பட வேண்டும்
              
இது ஊரடங்கு நிபந்தனைகளின்படி சமூக இடைவெளி பின்பற்றுவதற்கான ஒரு முயற்சியாகும்

 இனி வரும் காலங்களில்  வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமலும் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாமலும் வணிகம் செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

இவ்வாறு   மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன்   தெரிவித்துள்ளார்

Tuesday, April 21, 2020

On Tuesday, April 21, 2020 by Tamilnewstv in    
காகம் மற்றும் எலிகள் தவிர்த்து மற்ற எந்த விலங்குகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பாம்பு ஆகிய எதை பிடிக்க முயற்சித்தாலும், வேட்டையாடினாலும் குற்றமே என்பதன் அடிப்படையில்

திருச்சி வனச்சரகர் பழனிவேல் தலைமையில்,வனவா்கள்,மதன்ராஜ், சரவணன்   மற்றும் வனக்காப்பாளர்கள்
சரவணன், ரவி, ஞானசம்மந்தம்  ஆகியோர்  (வனத்துறையின்) ரோந்து பணி சோதனை மேற்கொண்டபொழுது மணச்சநல்லுா், வலையூர் கிராமத்தை சாா்ந்த 1. ஜெயபாலன் (35), 2.கோபிநாத் (38), மற்றும்
3.கோபிநாதன் (35) ஆகிய மூன்று நபர்கள் விவசாய நிலத்தில் முயல் பிடிக்க கன்னி சரம்(Trap) வைத்திருந்தது தெரிய வந்தது. மேற்கண்ட மூவர்களை பிடித்து விசாரணை செய்த போது வேட்டைக்காக கன்னி வைத்த குற்றத்தை ஒப்புக்கொண்டனா்.

மேற்காணும் சம்பவம் தொடா்பாக  வன உயிரின பாதுகாப்பு சட்ட பிரிவுகளின்  படி வேட்டையாட முயற்சித்த குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பின்னர் மாவட்ட வன அலுவலர், சுஜாதா IFS  உத்தரவின் படி ரூபாய்.15,000/- இனக்க கட்டணம் வசூலிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.

Monday, April 13, 2020

On Monday, April 13, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில்
மதுவை தரையில் ஊற்றுவது போல் நாடகமாடி

ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலில் ஊற்றி புதருக்குள் மறைத்த காவலர்கள் காவல் நிலையத்தில் பரபரப்பு.



திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிக்கும் பணி நடைபெற்றது. அப்போது காவல் நிலையத்தின் ஒரு பகுதியில் மதுபாட்டில்களை திறந்து மதுவை கீழே ஊற்றி விட்டனர். ஆனால் அந்த பணிகள் எல்லாம் முடித்து சென்று விட்ட பின்னர் அங்குள்ள புதர் போன்ற பகுதியில் சில மதுபாட்டில்கள் அப்படியே ஒரு சிறிய சாக்கில் இருப்பது தெரியவந்தது. இதுமட்டுமின்றி ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலிலும் முழுவதுமாக மதுவை நிரப்பி புதருக்குள் மறைத்தும் சாக்குப் பைகளில் முழு பாட்டிலை வைத்து இருந்தது தெரியவந்தது

பின்னர் இதுதொடர்பாக தகவல் அறிந்த செய்தியாளர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று அதை காட்சிகளாக பதிவு செய்வது பற்றி தகவல் அறிந்த போலீசார் மீண்டும் வந்து அந்த மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும் போது அந்த மதுபாட்டில்களை திறக்க முடியாததால் அப்படியே விட்டுச் சென்றதாக கூறினர். ஆனால் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் முழுவதுமாக மது நிரப்பப்ட்டது எப்படி என்று போலீசாரிடம் கேட்ட போது அதற்கான பதிலை தர மழுப்பி விட்டனர்.

 இதனால் ஒதுக்கி பதுக்கி வைக்கப்பட்ட மதுபாட்டில்களின் ரகசியத்தை அறிய காவல்துறை உயரதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கி உள்ளது.


இதனை அறிந்த காவல் ஆய்வாளர் கண்ணதாசன் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல்
அவரது வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கி மூலம் (மயிர புடுங்கி வந்தீங்களா) என்று
திட்டி விரட்டி உள்ளார் ஆகையால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Sunday, April 12, 2020

On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    

திருச்சி ஏப் 12





திருச்சி சுப்பிரமணியபுரம்  பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த குழந்தைகளின் தந்தை டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பினார்.  கடந்த10 நாட்களுக்கு முன்பு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர்  திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து அவரது மனைவி  தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் திருச்சி எடத்தெரு கீழப்புதூர் பகுதியில் உள்ள  தாயார் வீட்டுக்கு வந்தார். கீழபுதூரில் உள்ள வீட்டிற்கு வந்தனர். அங்கு அந்த வீட்டில் மொத்தம் 12 பேர் இருந்துள்ளனர். இதையடுத்து ,12 நபர்களுக்கும் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
 இதில் ஏற்கனவே கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருபவரின் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து இன்று காலை  தாயும், குழந்தையையும் மருத்துவ குழுவின் 108 ஆம்புலென்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் உடனடியாக அப்பகுதி முழுவதும் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினியை தெளித்தனர்.

Sunday, April 05, 2020

On Sunday, April 05, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 05

திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து 67 பேர்  தனியார் கல்லூரிக்கு இடம்  மற்றப்பட்டனர்.

   
திருச்சி அரசு மருத்துவமனையில்  உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் 120 பேர் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 17 பேருக்கு தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எஞ்சியவர்களின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இவர்களில் 36பேருக்கு தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து மீதும் இருந்த  67 பேர் பாதுகாப்பு உடை அணிவிக்கப்பட்டு
10- 10பேர்களாக 108 ஆம்புலன்ஸ் மூலம் டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் ஜமால் முகமது தனியார் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். 7 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் அவர்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபர்களின் விருப்பத்தின் பேரில் இடம் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
On Sunday, April 05, 2020 by Tamilnewstv in    
AINBOF பொதுச் செயலாளர் G.V மணிமாறன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 

திருச்சி கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக புயல் நிவாரணத்தில் இருந்து தற்போது ஊரடங்கு உத்தரவு வரை பொது சேவையில் சமூக நலத்தில் அக்கறை கொண்டு உணவு சாலையோர மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது


தமிழகத்தில் தொற்றுநோய் பரவாமல் இருக்க சில நாட்களாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அதேபோன்று சாலையோர மக்கள்  பாதிக்காமல் இருக்க அரசு பல்வேறு சமூகநல அமைப்பினரை உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டது அதற்கு

பல சமூக நல அமைப்பினர் சாலையோர மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்



அதன் தொடர்ச்சியாக இன்று கனரா வங்கி அதிகாரிகள் சங்கம்  சார்பாக சத்திரம் பேருந்து நிலையம்  அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கும் அதன் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சாலையோர மக்களுக்கு இலவச உணவு வழங்கினர்

இந்நிகழ்வை கனரா வங்கி மேலாளர் அம்மா பேட்டை கிளை அக்பர் துவக்கி வைத்தார் மண்டலச் செயலாளர் ராஜகோபால் எஸ் ஆர் கிருஷ்ணன்  விஜயலட்சுமி இந்நிகழ்வில் கலந்து கொண்டு உணவு வழங்கினார்கள்
என சங்கத்தின் ஊடகத் செய்தி தொடர்பாளர் *ஆர் வி எஸ்* தெரிவித்தார்

Saturday, April 04, 2020

On Saturday, April 04, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 04

அதிமுக  நிர்வாகி RC கோபி தலைமையில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.


தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார் அதன் அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது


 மக்கள் அதிகமாகக் கூடும் இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு தொற்று பரவாமல் இருக்கவும் அதிமுக  சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்நோய் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டிலும் நடைமுறை பின்பற்றி வருகிறது. 

கொரோனா வைரஸை பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி  ஸ்ரீரங்கம் பகுதி அதிமுக  சார்பில் நிர்வாகி R.C. கோபி தலைமையில் பிரியாசிவகுமார், ராமசாமி திருவேங்கடம்  சசிரேக ஜெயந்தி வெங்கடேஷன் ராஜு,ஆகியோர்  ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும்  காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Friday, April 03, 2020

On Friday, April 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 03

திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு
மலிவு விலையில் காய்கறி விற்பனை - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 14ம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர இதர வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. 

இதையடுத்து தமிழக அரசின் உள்ளாட்சி துறை சார்பில் மலிவு விலையில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி பாலக்கரை பகுதியில் உள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று இந்த விற்பனையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,  வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு வாரத்திற்கு தேவையான 11 வகையான காய்கறிகள் 150 ரூபாய் என்ற மலிவு விலைக்கு தமிழக அரசால் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்ற காரணத்திற்காக வீடுகள் தோறும் சென்று இந்த காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. இந்த காய்கறிகளை மக்கள் வாங்கி பயன் அடைந்து கொள்ள வேண்டும்.  வீட்டைவிட்டு வெளியில் வராமல் உள்ளேயே இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளை உள்ளடக்கிய 4 கோட்ட பகுதிகளில் தினமும் இந்த காய்கறி விற்பனை நடைபெறும். அதனால் கொரோனா தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.


On Friday, April 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 03

திருச்சி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த 500 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியா உல் ஹக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
திருச்சி மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் 600 பேர் மீது 500 வழக்கு பதியப்பட்டு, 500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமலும், விதிமீறல் செய்தவர்கள் எனவும் என  2300 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி முதல் நேற்று
2558 நபர்கள் மீது
2151வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதுவரை 2228 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரணமின்றி சுற்றித் இருந்ததாக மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல்
2வரை 19 ஆயிரத்து, 970 வழக்குகள் பதியப்பட்டுள்ளது
என தெரிவித்துள்ளார்.


On Friday, April 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாநகர காவல் துறையினருக்கு சனிடைசர் மற்றும் முக கவசம் மாநகர காவல்துறை ஆணையர்  வழங்கினார்


திருச்சி மாநகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கு சமூக விலகலை கடைபிடிக்க வேண்டிய 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

 அது சம்பந்தமாக காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவை முறையாக அமல்படுத்தும் பொருட்டும் சமூக விலகலை பொதுமக்கள் கடைபிடிக்கவும் தற்காலிக காய்கறிகள் அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி மாநகரில் முக்கியமான பகுதிகளில் காவல் துறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகரத்தில் பணிபுரியும் சட்டம் மற்றும் ஒழுங்கு குற்றப்பிரிவு சிறப்பு பிரிவுகள் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு மாநகர ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படை மற்றும் திருச்சி மாநகரத்தில் பணிக்கு வந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிய அமைச்சுப் பணியாளர்கள் ஆகிய 2500 நபர்களுக்கு தலா 500 மில்லி லிட்டர் பாட்டில் ஒன்று முக கவசம் 2 மற்றும் பொருட்கள் அடங்கிய பையனை மாநகர காவல்துறை ஆணையர் வழங்கினார்

Thursday, April 02, 2020

On Thursday, April 02, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 2

திருச்சி அரசு  மருத்துவமனையில் கொரோனா வைரஸ்
நோய் 100ஐ தாண்டியது  - வெளியில் சுற்றி திரிந்தால்  இனி  குற்றவியல் வழக்கு தான் -


மாவட்ட
ஆட்சித்தலைவர் எச்சரிக்கை 


திருச்சி  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
3நபர்கள் கொரோனா
வைரஸ் நோய் தடுப்பு தனி பிரிவில் சிகிச்சைபெற்று வந்தனர்
இதில் ஈரோட்டை சேர்ந்த நபருக்கு
கொரோனா வைரஸ்
நோய் உள்ளதாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 80நபர்களும்
இன்று 27நபர்களும் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டுள்ளனர்
இதில் 43நபர்களுக்கு இரத்த மாதிரி
பரிசோதனை
எடுக்கப்பட்டுள்ளது.
இது வரை மொத்தம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
110 நபர்கள்
சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
சாலைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களில்
1 நபர் - மட்டுமே மாஸ்க் அணிந்து பயணம்
செய்ய வேண்டும். பொதுமக்கள் சிலர்
காய்கறிகள் வாங்க குழந்தைகளுடன் வருவதை தவிர்த்தல் வேண்டும்
2நபர்கள் பயணம்
செய்தால் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படுவதுடன் வாகனம் பறிமுதல்
செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  எச்சரித்துள்ளார்.

On Thursday, April 02, 2020 by Tamilnewstv in    
*திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார்*

கொரோனா உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள் பலர் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகினறனர்.

 அதனால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆயிரம் ரூபாய்  நிவாரண நிதி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் பணி இன்று முதல் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.
 இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் மரக்கடை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இதை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு உணவுப் பொருட்களை பெற்று சென்றனர். இதன் பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில். கரோனா தொற்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா தொற்றிலிருந்து தமிழக மக்கள் விடுபட வேண்டும் என்பதற்காக அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக  திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்து 84 ஆயிரத்து 587 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையும், உணவுப்பொருட்களும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கவேண்டும். வெளியில் வரக்கூடாது.  அனைவரும் வெளியில் வரக் கூடாது என்பதற்காக தான் இந்த ஒரு மாதத்திற்கான உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மற்றவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படும். கொரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களை காக்க வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து திருச்சி கடைவீதியில் உள்ள பெரிய கம்மாள தெரு மற்றும் சின்ன கம்மாள தெரு ஆகிய தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுப்பட்டு பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  பார்வையிட்டார்.
இந்நிகழ்வின்போது பொறுப்பாளர்கள் ஜவகர்,அன்பழகன்,சந்துகடைசந்துரூ,
உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்

Wednesday, April 01, 2020

On Wednesday, April 01, 2020 by Tamilnewstv in    
திருச்சி அமைச்சர் வளர்மதி இலவசமாக முகக் கவசம் வழங்கினார்

திருச்சி



கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.



இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. வரும்  ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதன் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனையில் உள்ள வார்டுகளை தமிழக பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வைரஸ் தாக்கத்தில் இருந்து காத்து கொள்ளும் வகையில் மருத்துவமனை மற்றும் அப்பகுதியில் இருந்து பொது மக்களுக்கு முக கவசம் வழங்கி அறிவுரை கூறினார்.

இந்நிகழ்வின்போதுபகுதிச் செயலாளர் டைமன்செயலாளர் டைமண்ட் திருப்பதி  அமைச்சர் நேர்முக உதவியாளர் முருகன் அதிமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Thursday, March 26, 2020

On Thursday, March 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 26

 மருத்துவமனையில் வாலிபருக்கு கொரனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் தேதி துபாயில் இருந்து  விமானம் மூலம் திருச்சி வந்த ஈரோட்டை சேர்ந்த ராஜ்குமார் (24) என்பவர் வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக திருச்சி அரசு   மருத்துவமனையின்  சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டது.

அதில் அவருக்கு கொரனா நோய் தொற்று  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  தற்போது அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மேலும்  ஒருவருக்கு கொரன் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 26 பேர் கண்டறியப்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பை தொடர்ந்து கொரனா பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.


On Thursday, March 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி பெரிய கம்மாளத் தெருவில்  கன்னிகா பரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறும்.

 தற்போது ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள நிலையில் இந்த ஆண்டு விழா நடத்த திருச்சி மாநகர போலீசில்  அனுமதி கேட்டனர். அப்போது நிர்வாகத்தினர் 30 பேருக்கும் குறைவான உபயதாரர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து போலீசார் அனுமதி அளிததனர்.

 ஆனால் அம்மன் வீதி உலா நடைபெற்ற போது 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். இப்போது இந்த விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sunday, February 23, 2020

On Sunday, February 23, 2020 by Tamilnewstv in    
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தேசம் காப்போம் பேரணி நடைபெற்றது.

இப்பேரணியின் முடிவில் நடந்த கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கையை கைவிட வேண்டும், தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு உரிமை பாதுகாத்திட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

நாங்கள் முஸ்லீம்கள் இல்லை. இருப்பினும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு காரணம், நாங்கள் ஜனநாயக சக்திகள். இந்து மத கொள்கை மீது மிகுந்த பற்று கொண்ட காந்தியையே கோட்சே சுட்டுக் கொன்றான் என்றால் ஆர்எஸ்எஸ்சை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ்சிற்கு பல அணிகள் உண்டு. அதில் ஒரு அரசியல் அணிதான் பிஜேபி. சங் பரிவாரின் வெறுப்பு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது தான். தாழ்த்தப்பட்டவர்கள் நீதிபதிகள் ஆனது யாரும் போட்ட பிச்சை அல்ல. அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டமே அதற்கு காரணம். முஸ்லீம்களை தனிமைப்படுத்த நாங்கள் விடமாட்டோம்" எனக் கூறினார்.