Saturday, May 16, 2020
On Saturday, May 16, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
மணப்பாறை அருகே
குளத்தில் நீரிழ் மூழ்கி 9 வயது இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு.
கிராமமே சோகத்தில் மூழ்கியது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வேம்பனூர் அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை. இவரது மனைவி கண்ணம்மாள். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். கடைசியாக உள்ள ராமுபிரியா, லெட்சுமி பிரியா என்ற 9 வயது நிரம்பிய இரண்டு மகள்களும் இரட்டைப் பிறவிகள். வெள்ளபிச்சம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வந்த இரட்டை சகோதரிகள் இன்று அதே பகுதியில் உள்ள கும்மடிக்குளத்தில் துணி துவைத்து விட்டு குளிக்கச் சென்ற நிலையில் இரண்டு சிறுமிகளும் நீரில் மூழ்கினர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இரண்டு சிறுமிகளையும் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரட்டை சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்கள் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment