Saturday, May 16, 2020
On Saturday, May 16, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
மணப்பாறை அருகே
குளத்தில் நீரிழ் மூழ்கி 9 வயது இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு.
கிராமமே சோகத்தில் மூழ்கியது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வேம்பனூர் அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை. இவரது மனைவி கண்ணம்மாள். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். கடைசியாக உள்ள ராமுபிரியா, லெட்சுமி பிரியா என்ற 9 வயது நிரம்பிய இரண்டு மகள்களும் இரட்டைப் பிறவிகள். வெள்ளபிச்சம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வந்த இரட்டை சகோதரிகள் இன்று அதே பகுதியில் உள்ள கும்மடிக்குளத்தில் துணி துவைத்து விட்டு குளிக்கச் சென்ற நிலையில் இரண்டு சிறுமிகளும் நீரில் மூழ்கினர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இரண்டு சிறுமிகளையும் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரட்டை சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்கள் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
கர்நாடகாவில் கீழ்த்தரமான போராட்டங்கள் ! ஓசூர் கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி அருகே தமிழக முதல்வர் உருவ படம் பாடை கட்டி வைத்து காவேரி ப்ரஜ...
0 comments:
Post a Comment