Thursday, March 26, 2020

On Thursday, March 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி பெரிய கம்மாளத் தெருவில்  கன்னிகா பரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறும்.

 தற்போது ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள நிலையில் இந்த ஆண்டு விழா நடத்த திருச்சி மாநகர போலீசில்  அனுமதி கேட்டனர். அப்போது நிர்வாகத்தினர் 30 பேருக்கும் குறைவான உபயதாரர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து போலீசார் அனுமதி அளிததனர்.

 ஆனால் அம்மன் வீதி உலா நடைபெற்ற போது 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். இப்போது இந்த விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments: