Thursday, March 26, 2020

On Thursday, March 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 26

 மருத்துவமனையில் வாலிபருக்கு கொரனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் தேதி துபாயில் இருந்து  விமானம் மூலம் திருச்சி வந்த ஈரோட்டை சேர்ந்த ராஜ்குமார் (24) என்பவர் வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக திருச்சி அரசு   மருத்துவமனையின்  சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டது.

அதில் அவருக்கு கொரனா நோய் தொற்று  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  தற்போது அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மேலும்  ஒருவருக்கு கொரன் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 26 பேர் கண்டறியப்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பை தொடர்ந்து கொரனா பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.


0 comments: