Friday, May 15, 2020

On Friday, May 15, 2020 by Tamilnewstv in    
முசிறி அருகே  குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி

              

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கிராமம் அமைந்துள்ளது . இந்த கிராமத்தில் சுமார் 3000 குடும்பத்தினர் பல்வேறு ஊர்களில் குறி சொல்லி ஜோதிடம் சொல்லும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

                
 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் குறி சொல்லி வாழ்க்கையை நடத்தும் காட்டு நாயக்கர் இன மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்தது .உணவுக்கு வழியில்லாமல் குழந்தைகளுடன் இம்மக்கள் வாடினர்.
இது குறித்து அறிந்த தமிழக  முன்னாள் முதன்மை செயலாளர் ராம் மோகன் ராவ் அவர்களால் நடத்தப்படும் ஆர் எம் ஆர் பாசறை மூலமாக குடுகுடுப்பை அடித்து குறி சொல்லும் இந்த மக்களுக்கு 5 கிலோ அரிசி நிவாரண பொருளாக வழங்கினார் .நிவாரண பொருட்களை பாசறை நிர்வாகிகள் அரங்கூர் கிராமத்திற்கு வந்து நேரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் வழங்கினர். வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டு வந்த தங்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கியதற்கு குறிசொல்லும் மக்கள் நன்றி தெரிவித்து வாழ்த்தினர் .

0 comments: