Friday, May 29, 2020

On Friday, May 29, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 29

தமிழகத்தில் கோவில்களை திறக்க இந்து மக்கள் கட்சி- சூடம் ஏற்றி கோரிக்கை

 கொரோனா எனும் கொடூர அரக்கனை அழிக்க, தெய்வங்களால் மட்டுமே முடியும் என்பதால், கோவில்களை திறக்க வேண்டும்' 

'மனிதர்களின் கலங்கிய மனதிற்கு ஆறுதல் அளிப்பது, கோவில்கள் மட்டுமே. எனவே, அவற்றை மீண்டும் திறக்க வேண்டும். கோவில்கள் மூடப்பட்டிருப்பது, அவற்றை பராமரிக்கும் பூசாரிகளின் பொருளாதார நிலையை மோசமாக பாதித்துள்ளதால், அவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்' மேலும்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுப்பிரியர்களின் வசதிக்காக டாஸ்மாக் கடைகளை திறந்த தமிழக அரசு,  பக்தர்களின் வழிபாட்டிற்காக கோவில்களை திறக்க வேண்டும்.
கோவில்களுக்கு சென்று வருவதன் மூலம் மக்களின் மன அழுத்தம் குறையும் எனவே இந்த விவகாரத்தில் அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
என்பதை வலியுறுத்தி
மாநில இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம் ஜி தலைமையில் 
மலைக்கோட்டை அருள்மிகு மாணிக்க விநாயகர் திருக்கோவில் முன்பாக கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

0 comments: