Friday, May 29, 2020
On Friday, May 29, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி தலைமைச் செயலரிடம் திமுக அளித்த மனுக்கள் அனைத்தும் உண்மைதான் என்பதை நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம் என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு கூறினார்.
ஊரடங்கால் பாதித்தவர்களின் குறைகளைக் கேட்பதற்காக திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்படாத மனுக்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் திமுகவினர் வழங்கிவருகின்றனர். இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் வழங்கினார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய கே.என். நேருபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருச்சி மாவட்டத்தில் பெறப்பட்ட 22 ஆயிரத்து 500 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம். அதை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா விவகாரத்தில் தொடக்கத்திலேயே உபகரணங்கள் வாங்குவது, மருத்துவமனையை தயார்செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டிருந்தால் பிரச்னை அதிகமாகியிருக்காது.செய்தியாளர்களிடம் பேசும் கே.என். நேருதலைமைச் செயலரிடம் திமுக எம்.பி.க்கள் அளித்த மனுக்கள் அனைத்தும் பொய் என அமைச்சர் காமராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவை அனைத்தும் உண்மையான மனுக்கள் என நிரூபிக்கத் தயாராக உள்ளோம். கரோனா விவகாரத்தில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை. பல விவகாரங்களை அரசு மறைத்துவருகிறது" எனக் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment