Saturday, November 22, 2014
திருப்பூர் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக்கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் ஆணையாளர் எம்.அசோகன், துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்தில் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், கிருத்திகா சோமசுந்தரம் உள்ளிட்ட மண்டல தலைவர்கள், பூலுவபட்டி பாலு, வசந்தமணி,அன்பகம் திருப்பதி, பிரியா சக்திவேல் உள்ளிட்ட நிலைக்குழு தலைவர்கள், மாநகர பொறியாளர் ரவி மற்றும் உதவி பொறியாளர்கள், சபியுல்லா, வாசுகுமார், கண்ணன் உள்ளிட்ட உதவி ஆணையாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மேயர் அ.விசாலாட்சி கொண்டு வந்த சிறப்பு கவனதீர்மானத்தை கொண்டு வந்து அவர் பேசியதாவது:-
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 141 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.அது 142 அடியை எட்டியுள்ளது.இதன் மூலம் அணை குறித்த அத்தனை கேடு மதியாளர்களின் புளுகு மூட்டைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் எந்த விதமான அணுகு முறையைக் கடை பிடித்தல், அதன் மூலம் தமிலனாத்டிர்க்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும், நன்மை ஏற்படும் என்பதாஹிப் புரிந்து, முல்லைப் பெரியாறு பிரச்சனையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துத் தமிழ்நாட்டு மக்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தந்த வடகிழக்குப் பருவமழையினும் விஞ்சிய கருணை மழைமக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இம்மன்றம் நன்றியோடு, போற்றி புகழ்ந்து வணங்கி அவர் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என இம்மன்றம் இறைவனிடம் வணங்கி மகிழ்கிறது.இவ்வாறு மேயர் விசாலாட்சி பேசினார்.
கூட்டத்தில் மாநகராட்சிக்கு உள்பட்ட தென்னம்பாளையம், ஊத்துக்குளி சாலை, 15 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள
கூட்டத்தில் மாநகராட்சிக்கு உள்பட்ட தென்னம்பாளையம், ஊத்துக்குளி சாலை, 15 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள
மூன்று இடங்களில் குடியிருப்பு மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உட்பட 216 தீர்மானங்கள் மன்ற உறுபினர்களின்ஒப்புதலுக்கு முன்வைக்கப்பட்டன.முறையாக ஆய்வு மேற்கொள்ளாததால், மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் தீர்மானங்களை ஒத்திவைக்க வேண்டுமென மண்டல தலைவர்கள் வலியுறுத்தி பேசினார்.நகரில் உள்ள டியூப்லைட்டுகளை, எல்.இ.டி., விளக்குகளாக மாற்றுவது, ரோடு வசதி, மழைநீர் வடிகால் வசதி, புதிய போர்வெல் அமைப்பது, அம்மா உணவகம், புதிய உபகரணங்கள் கொள்முதல் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் மீது மன்ற உறுப்பினர்கள் பேசினார்.
12வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் (இ.கம்யூனிஸ்ட்) ஜெயலலிதா படத்தை மன்ற தில் மற்ற கூடாது என பேசியதற்கு மேயர் விசாலாட்சி பதிலளித்து பேசியதாவது:-
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 141 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.அது 142 அடியை எட்டியுள்ளது.இதன் மூலம் அணை குறித்த அத்தனை கேடு மதியலர்களின் புளுகு மூட்டைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் எந்த விதமான அணுகு முறையைக் கடை பிடித்தல், அதன் மூலம் தமிலனாத்டிர்க்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும், நன்மை ஏற்படும் என்பதாஹிப் புரிந்து, முல்லைப் பெரியாறு பிரச்சனையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துத் தமிழ்நாட்டு மக்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தந்த வடகிழக்குப் பருவமழையினும் விஞ்சிய கருணை மழைமக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இம்மன்றம் நன்றியோடு, போற்றி புகழ்ந்து வணங்கி அவர் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும்.
இவ்வாறு மேயர் விசாலாட்சி பேசினார்.
தேசத் தந்தை காந்தியடிகள் ஒரு கவுன்சிலராக இல்லாத நிலையில் ஒரு அரசு அதிகாரிகள் கிறிஸ்துவராக இருந்தால் ஏசு, மாதா படங்களையும், இஸ்லாமியர்களாக இருந்தால் மெக்கா படத்தையும், இந்துக்களாக இருந்தால் விநாயகர், முருகன் உள்ளிட்ட அவரகளின் இஷ்ட தெய்வங்களின் படங்களைஅவர் இந்திய தேசதின் விடுதலைக்காக அமைதியுடனும், அறப்போரட்டங்கள் நடத்தியும் சுதந்திரம் பெற்று தந்தார்.அவருடைய படத்தை இந்திய அரசாங்கம் ரூபாய் நோட்டில் அச்சடித்துள்ளன ஒரு வியாபார நிறுவன உரிமையாளராக இருந்தாலும்,அதிகாரியானாலும், ச ாதாரண தொழிலாளியாக இருந்தாலும் அவரவர ்களின் வீடுகளில், அலுவலகத்தில் அவரவர்கள் வழிபாடும் தெய்வங்களின் படங்களை வைத்திருப்பார்கள். மாமன்றத்தில் அசுர பலத்துடன் உள்ள நாங்கள் (அண்ணா தி.மு.க) இந்திய தேசத்தின் தந்தை காந்தியடிகள் என்றால், தமிழக மக்களின் தாயாக இருந்து காத்துவரும் எங்களின் இஷ்ட தெய்வமான ஜெயலலிதா படத்தை வைத்துள்ளோம் என்று பதிலளித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
முருகசாமி, செல்வம், ரங்கசாமி, வசந்தாமணி, செல்வி (அண்ணா தி.மு.க.):-
கடந்த 6 மாதத்திற்கு முன்பே 2வது குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அமைச்சர், மேயர் ஆகியார் கூறியும், இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. குடிப்பதற்கு ஏதுவாக இல்லாத 3வது குடிநீர் திட்டத்தின் வாயிலாக விநியோகம் செய்யப்படும் தண்ணீரை குடிப்பதால் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுதாக மக்கள் நினைக்கிறார்கள். 2வது குடிநீர் திட்ட தண்ணீரை வழங்குவதில் ஏதாவது இடையூறு உள்ளதா என்பதை தெரியப்படுத்த வேண்டும்.2வது குடிநீர் திட்ட தண்ணீர் தெற்கு பகுதிக்கு விநியோகம் செய்து 2 மாதத்திற்கு மேல் ஆகிறது. எனவே, குடித்தநீரை முறையாக விநியோகிக்க மேயர், ஆணையாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
மாரப்பன் (மா.கம்யூ.,):- எனது வார்டு பகுதியில் கடந்த மாதத்தில் பெய்த மழையால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மழைநீர் தேங்கி நிற்கிறது. வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தெருவிளக்குகள் எரிவதில்லை. அடிப்படை பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.இவ்வாறு விவாதங்கள் நடந்தது.கூட்டத்தின் முடிவில் மாநகராட்சி பகுதிகளில் சாலை மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.45 கோடி வளர்ச்சி பணிகளுக்கு மன்றம் ஒப்புதல் வழங்கியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
0 comments:
Post a Comment