Saturday, November 22, 2014
மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் உலக தரம் வாய்ந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறியுள்ளளார்.
திருப்பூர் வடக்கு கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக அரசின் சுகாதார மேம்பாட்டு பணிகளை மேம்படுத்தும் வகையில், தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.ரகுபதி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன் முன்னிலை உரையாற்றினார்.மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம் வாழ்த்தி பேசினார்.முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முகாமினை துவக்கி வைத்தும், பயனாளிகளுக்கு மருத்துவ கருவிகளை வழங்கியும் பேசியதாவது:-
தமிழக அரசின் சார்பில், தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 13 வட்டாரங்களில், வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் மொத்தம் 39 மருத்துவ முகாம்கள் ஊரக பகுதிகளில் நடைபெற உள்ளன. முதற்கட்டமாக திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெறுகிறது,மக்கள் நோய் நொடியின்றி சுகாதாரமாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவ துறைக்காக பல கோடி ரூபாய் நிதிகளை ஒதுக்கி இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற உடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4 லட்சம் மதிப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வண்ணம் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.12 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. கிராமப்புறத்தில் மருத்துவர்களே வந்து முகாமிட்டு கிராம பெண்கள் மற்றும் மக்கள் சிகிச்சை அளிக்கும் முகாம்கள் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 30 க்கும் மேல் நடைபெற்று வருகிறது.
இது போன்ற சிறப்பான திட்டங்களை மக்கள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி தந்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தான் உலக தரத்தில் சென்னையில் ஒரு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையை அவர் உருவாக்கி தந்துள்ளார்.
நீங்கள் சுகாதாரமாக வாழ வேண்டும், என்பதற்காக தான் ஜெயலலிதா வழிகாட்டுதல்படியான திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது.
இது போன்ற சிறப்பான திட்டங்களை மக்கள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி தந்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தான் உலக தரத்தில் சென்னையில் ஒரு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையை அவர் உருவாக்கி தந்துள்ளார்.
நீங்கள் சுகாதாரமாக வாழ வேண்டும், என்பதற்காக தான் ஜெயலலிதா வழிகாட்டுதல்படியான திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது.
எனவே மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்றும் நீங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
இந்த முகாமில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி, சத்துணவு மற்றும் உடல் நலம் பேண கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த கண்காட்சியை மருத்துவ துறையினர் அமைத்து இருந்தனர். முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள், பெண்கள் மருத்துவம், இருதய நோய் பரிசோதனை, எலும்பு மூட்டு,, பல், சர்க்கரை நோய் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி, சத்துணவு மற்றும் உடல் நலம் பேண கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த கண்காட்சியை மருத்துவ துறையினர் அமைத்து இருந்தனர். முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள், பெண்கள் மருத்துவம், இருதய நோய் பரிசோதனை, எலும்பு மூட்டு,, பல், சர்க்கரை நோய் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.
இம்முகாமில் 214 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கண் கண்ணாடிகளை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வழங்கினார்
மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொது மருத்துவம், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவம், பெண்களுக்கான மகப்பேறு மருத்துவம், இருதய நோய் சிகிச்கை, காது மூக்கு சிறப்பு சிகிச்சை, எலும்பு சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவம், பல்,மற்றும் சர்க்கரை நோய் மருத்துவம், கண், தோல் நோய் சிறப்பு மருத்துவம், சித்த மருத்துவம், ஆகிய மருத்துவ சேவைகள் செய்யப்படுகின்றன. மேலும், நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண்இருபாலருக்கும் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை நுஊபு பரிசோதனை, கண் பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.என். விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் எஸ்.எம்.பழனிசாமி, அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், இணைஇயக்குநர் கேசவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்னுலிங்கம் (காளிபாளையம்), ஸ்ரீதேவி பழனிசாமி (வள்ளிபுரம்), செல்வகுமார் (ஈட்டிவீரம்பாளையம்), மூர்த்தி (பொங்குபாளையம்), லட்சுமி (கணக்கம்பாளையம்), மண்டல தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், ஒன்றியகுழு உறுப்பினர்கள் கிருத்திகா ரத்தினசாமி, சித்ரா பெரியசாமி, சித்ரா சௌந்தராஜன், மாவட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் எம்.மணி, புத்தரச்சல் பாபு, ராஜேஷ்கண்ணா, கோகுல், கவுன்சிலர் சண்முக சுந்தரம் மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
0 comments:
Post a Comment