Tuesday, November 25, 2014
உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஓய்வு இடைநிலை சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் எம்.திருமலைசாமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் ஈங்கூர் சேதுபதி முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் சிதம்பரம் வரவேற்றார்.
உண்ணாவிரத போராட்டத்தில கரூர் மாவட்ட தலைவர் ஆரோக்கிய சாமி, புதுக்கோட்டை மாவட்ட தலைவர் தியாகராஜன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், நாமக்கல் மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து, நாகை மாவட்ட தலைவர் வரதராஜ், தென்மண்டல தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் மேற்கொண்ட 3444 பேரில் இன்று வரை ஜி.ஓ.எம்.எஸ். நெ.216 தேதி 22.03.1993 ஐ அமுல்படுத்தப்பட்டவர்கள் போக மீதியுள்ளவர்களுக்கு ஒரே ஆணையாகக் கல்வி செயலகம் வெளியிட வேண்டும். இன்று வரை 3444 பேரைத் தவிர்த்து புதிதாக வழக்கு தொடுத்து தீர்ப்பு பெற்ற மற்றும் இன்னும் தீர்ப்பு பெறாத அனைவருக்கும் ஓர் பொது ஆணை வெளியிட வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் ஜி.ஓ.எம்.எஸ். நெ.216 தேதி 22.03.1993க்கான அரசாணைகள் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கும் பள்ளி கல்வித்துறையின் நிலைப்பாட்டால் தேவையற்ற குளறுபடிகள் உருவாகியுள்ளது. எனவே அனைவருக்கும் ஒரே ஆணையாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது.
உண்ணாவிரத முடிவில் மாநில இணைச்செயலாளர் அப்பாத்துரை நன்றி கூறினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
- 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 
 
 
 
0 comments:
Post a Comment