Tuesday, November 25, 2014
உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஓய்வு இடைநிலை சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் எம்.திருமலைசாமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் ஈங்கூர் சேதுபதி முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் சிதம்பரம் வரவேற்றார்.
உண்ணாவிரத போராட்டத்தில கரூர் மாவட்ட தலைவர் ஆரோக்கிய சாமி, புதுக்கோட்டை மாவட்ட தலைவர் தியாகராஜன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், நாமக்கல் மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து, நாகை மாவட்ட தலைவர் வரதராஜ், தென்மண்டல தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் மேற்கொண்ட 3444 பேரில் இன்று வரை ஜி.ஓ.எம்.எஸ். நெ.216 தேதி 22.03.1993 ஐ அமுல்படுத்தப்பட்டவர்கள் போக மீதியுள்ளவர்களுக்கு ஒரே ஆணையாகக் கல்வி செயலகம் வெளியிட வேண்டும். இன்று வரை 3444 பேரைத் தவிர்த்து புதிதாக வழக்கு தொடுத்து தீர்ப்பு பெற்ற மற்றும் இன்னும் தீர்ப்பு பெறாத அனைவருக்கும் ஓர் பொது ஆணை வெளியிட வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் ஜி.ஓ.எம்.எஸ். நெ.216 தேதி 22.03.1993க்கான அரசாணைகள் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கும் பள்ளி கல்வித்துறையின் நிலைப்பாட்டால் தேவையற்ற குளறுபடிகள் உருவாகியுள்ளது. எனவே அனைவருக்கும் ஒரே ஆணையாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது.
உண்ணாவிரத முடிவில் மாநில இணைச்செயலாளர் அப்பாத்துரை நன்றி கூறினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
0 comments:
Post a Comment