Tuesday, November 25, 2014
உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஓய்வு இடைநிலை சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் எம்.திருமலைசாமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் ஈங்கூர் சேதுபதி முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் சிதம்பரம் வரவேற்றார்.
உண்ணாவிரத போராட்டத்தில கரூர் மாவட்ட தலைவர் ஆரோக்கிய சாமி, புதுக்கோட்டை மாவட்ட தலைவர் தியாகராஜன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், நாமக்கல் மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து, நாகை மாவட்ட தலைவர் வரதராஜ், தென்மண்டல தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் மேற்கொண்ட 3444 பேரில் இன்று வரை ஜி.ஓ.எம்.எஸ். நெ.216 தேதி 22.03.1993 ஐ அமுல்படுத்தப்பட்டவர்கள் போக மீதியுள்ளவர்களுக்கு ஒரே ஆணையாகக் கல்வி செயலகம் வெளியிட வேண்டும். இன்று வரை 3444 பேரைத் தவிர்த்து புதிதாக வழக்கு தொடுத்து தீர்ப்பு பெற்ற மற்றும் இன்னும் தீர்ப்பு பெறாத அனைவருக்கும் ஓர் பொது ஆணை வெளியிட வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் ஜி.ஓ.எம்.எஸ். நெ.216 தேதி 22.03.1993க்கான அரசாணைகள் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கும் பள்ளி கல்வித்துறையின் நிலைப்பாட்டால் தேவையற்ற குளறுபடிகள் உருவாகியுள்ளது. எனவே அனைவருக்கும் ஒரே ஆணையாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது.
உண்ணாவிரத முடிவில் மாநில இணைச்செயலாளர் அப்பாத்துரை நன்றி கூறினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment