Wednesday, December 24, 2014

On Wednesday, December 24, 2014 by farook press in ,    
தாராபுரம், : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பாலப்பம்பட்டியைச் சேர்ந்தவன் வடிவேல் (28). கடந்த சில ஆண்டுகளாக தாராபுரத்தில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தான். 
அப்போது இவனுக்கும் தாராபுரம் உடுமலைரோடு குமரன்நகரைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரது மனைவி கவிதா (30) என்பவருக்கும் கள்ளத்தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தெரிந்த வெள்ளியங்கிரி கவிதாவை விட்டு பிரிந்து விட்டார். பிறகு வடிவேல் கவிதாவோடு தாராபுரம் கோட்டைமேடு பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளான். 
அப்போது அதே பகுதியில் அருகே குடியிருந்த செல்வராஜ் என்பவரது மனைவி ரேமாவுடன் (28) வடிவேலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 13.6.2014 அன்று இரவு ரேமா வீட்டில் தனியாக இருந்தபோது, வடிவேல் தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளான். இதற்கு அவனது கள்ளக்காதலி கவிதாவும் உடந்தையாக இருந்துள்ளாள். ரேமா மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வடிவேல் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேமாவை குத்திவிட்டு கவிதாவோடு தலைமறைவாகி விட்டான். இதில் அதிர்ஷ்ட வசமாக ரேமா உயிர் பிழைத்துக் கொண்டாள். 
இது குறித்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் போலீசார் இருவரையும் கைது செய்தனர். நேற்று வழக்கை குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஸ்ரீராமஜெயம் விசாரித்து வடிவேலுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும். கவிதாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

0 comments: