Wednesday, December 24, 2014
வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
வெள்ளகோவிலில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்தில் வாரத்தில் ஒரு நாள் (புதன்கிழமை) மட்டும் தேங்காய் பருப்பு வியாபாரம் நடைபெறும். வெள்ளகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வரும் தேங்காய் பருப்பை விற்பனை கூட அதிகாரிகள் டெண்டர் மூலம் விற்பனை செய்து விவசாயிகளுக்கு பணத்தை கொடுப்பார்கள்.
விவசாயிகள் கொண்டு வரும் தேங்காய் பருப்பை வாகனங்களில் இருந்து இறக்கவும், ஏற்றவும் தேங்காய் பருப்பு சுமைதூக்குபவர்கள், இறக்கு கூலியாக 100 கிலோ மூட்டை ஒன்றுக்கு விவசாயிகளிடம் இருந்து ரூ.6–ம், எடைக்கூலியாக ரூ.9.50 காசும், ஏற்றுவதற்கு கூலியாக ரூ.6.50 காசும் வியாபாரிகளிடம் இருந்து வாங்கி வந்தனர்.
இந்த கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும் என தேங்காய் பருப்பு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு வியாபாரிகள் கூலி உயர்வு தர முடியாத சூழ்நிலை இருப்பதாக கூறினர். இதனால் கடந்த 2 மாதங்களாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். வேலை நிறுத்தத்தால் தேங்காய் பருப்பு வியாபாரம் நடைபெறவில்லை. இது தொடர்பாக 3 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் கூலி உயர்வு பிரச்சினையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் நேற்று மீண்டும் என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ., ஈரோடு விற்பனைக்குழு செயலாளர் முருகானந்தன், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தேங்காய் பருப்பு சுமைதூக்குவோர் தொழிற்சங்க தலைவர் வீரக்குமார்(அ.தி.மு.க), தி.மு.க. தொழிற்சங்க தலைவர் தெண்டபாணி, தேங்காய் பருப்பு வியாபாரிகள் சங்க தலைவர் சாமிமுத்து, அ.தி.மு.க. நகர செயலாளர் டீலக்ஸ் மணி, நிலவள வங்கி துணைத்தலைவர் ராஜலிங்கம், அ.தி.மு.க. பிரதிநிதி முருகேசன், சேகர், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் இறக்கு கூலியாக 100 கிலோ மூட்டைக்கு ரூ.8ம், எடைக்கூலியாக ரூ.10–ம், ஏற்றுக்கூலியாக ரூ.10–ம் கொடுப்பது என முடிவானது. இந்த கூலி உயர்வு வருகிற 1–ந்தேதி முதல் 2016 வரை அமலில் இருக்கும்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தொழிலாளர்கள் 1–ந் தேதியில் இருந்து வேலைக்கு திரும்புகிறார்கள். எனவே விவசாயிகள் தங்களது விளை பொருளான தேங்காய் பருப்பை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வரலாம் என்று என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...

0 comments:
Post a Comment