Wednesday, December 24, 2014

On Wednesday, December 24, 2014 by farook press in ,    
உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அமாவாசை தினத்தன்று இங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் அங்குள்ள விநாயகர் கோவிலில் ஆனைமலையை அடுத்த ஓடையகுளத்தை சேர்ந்த மந்திரம்மாள் (வயது 70) என்பவர் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தார். அப்போது பக்தர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மந்திரம்மாள் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதே போல் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பஸ் ஏற சென்ற பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரத்தை சேர்ந்த அன்னபூரணி (50) என்பவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியும் மாயமானது. இதைதொடர்ந்து மந்திரம்மாள், அன்னபூரணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: