Sunday, April 05, 2015
சிவகங்கை அரசு மருத்துவக்
கல்லூரிக்கு சிறுநீரகம், நரம்பியல், இதய நோய் சிறப்பு மருத்துவர்கள்
மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை உபகரணங்கள்
தேவை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.97 கோடி
மதிப்பில் பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் பொது மருத்துவம்,
எலும்பு முறிவு, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, மகப்பேறு உள்பட
பல்வேறு துறை சார்ந்த பிரிவுகளில் தலைமை மருத்துவர்கள் மற்றும் உதவி
மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர். 500 நோயாளிகள் தங்கி
சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு சராசரியாக 300
நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தனியார் மருத்துவ மனைக்கு
இணையாக இந்த மருத்துவ மனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு
திட்டத்தின் அடிப்படையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு 16 படுக்கைகள்
உள்ளன.
ஆனால், சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக
வருவோருக்கு எம்ஆர்ஜ ஸ்கேன் வசதி இல்லாததால் மதுரை அரசு தலைமை
மருத்துவமனைக்கே பரிந்துரை செய்கின்றனர். இந்த ஸ்கேன் வசதியை மருத்துவக்
கல்லூரி வளாகத்தில் விரைந்து நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு
பணிபுரியும் மருத்துவர்களில் பெரும்பாலானோர் மதுரையிலிருந்தே வந்து
செல்கின்றனர். இதனால், நோயாளிகளுக்கு போதிய மருத்துவச் சிகிச்சை
கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
சிறுநீரகம், நரம்பியல், இதயம் தொடர்பான நோய்களுக்கு
சிகிச்சை அளிப்பதற்கு சிறப்பு மருத்துவர்கள் இல்லை. பல், காது, மூக்கு,
தொண்டை தொடர்பான பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் இருந்தும், அதற்கான
உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை கிடைக்கவில்லை.
மேற்கண்ட பிரச்னைகளுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்வதுடன்,
மக்கள் பிரதிநிதிகளும் இம்மருத்துவமனையின் தரத்தை உயர்த்தவும்,
நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment